6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்
Aug 14, 2025, 01:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்

Web Desk by Web Desk
Sep 6, 2023, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தற்போது, இந்த தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு விவரங்களைத் தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவால், அவர் போட்டியிட்ட புதுப்பள்ளி தொகுதி காலியானதானது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற தொகுதிகளில் உள்ள உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது. இதனால், 6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது.

இதனிடையே, இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், செப்டம்பர் 5-ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் செப்டம்பர் 8-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில், திரிபுரா மாநிலத்தில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும், ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்களித்த அனைவரது கை விரல்களிலும், அழியா மை வைக்கப்பட்டது. பிரச்சனை மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும், மூடி சீலிடப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று பதிவான வாக்குப் பதிவு சதவிதம் குறித்து தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசம் கோசி தொகுதியில் 50.30 சதவீதமும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் டும்ரி தொகுதியில் 64.84 சதவீதமும், உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ் தொகுதியில் 55.44 சதவீதமும், மேற்கு வங்கம் மாநிலம் துப்குரி தொகுதியில் 76 சதவீதமும், கேளராவில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 73 சதவீதமும், திரிபுரா மாநிலத்தில் உள்ள தன்புர் மற்றும் போக்ஸாநகர் தொகுதியில் 76 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags: bye electionindia bye
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி மீது கிரிமினல் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி .

Next Post

பாரத மண்டபத்தில் பிரமாண்டமான நடராஜர் சிலை!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies