உதயநிதி மீது கிரிமினல் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி .
Aug 8, 2026, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உதயநிதி மீது கிரிமினல் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி .

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 6, 2023, 11:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டி மேதகு தமிழக ஆளுநர். ஆர்.என். ரவிக்கு, பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது, சனாதன தர்மத்தை, டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் ஒழிக்க வேண்டும், அதை எதிர்ப்பதைவிட, ஒழிக்க வேண்டும் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ, 153 பி, 295 ஏ, 298, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியைச் சேர்ந்தவர், குறிப்பாக, அமைச்சராகவும் உள்ளார். இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். இவரது இந்த பேச்சு லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது.

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் உள்ள சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களிடையே அச்சம் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

 

மேலும், சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் களங்கப்படுத்துவது, அவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சை விதைப்பது, வன்முறை மற்றும் கலவரங்களைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

எனவே, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, கிரிமினல் வழக்கு தொடர, சட்டப் பிரிவு 196-ன் படி உங்களது மேலான அனுமதி தேவைப்படுகிறது. எனவே, தாங்கள், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கவேண்டும் என அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுப்பிரமணியன் சுவாமியின் எக்ஸ் பதிவில், ” திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தை உதயநிதி ஸ்டாலின் இழிவுபடுத்தினால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர, ஏற்கனவே பல முக்கியதர்கள் மேதகு ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், சுவாமியின் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.

Tags: bjpsubramanian swamy
Share
Tweet
SendShare
Previous Post

முட்டாள்தனமாகப் பேசிய உதயநிதி! – அண்ணாமலை.

Next Post

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்

Related News

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies