மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக-வின் வேட்பாளர் தினேஷ் சர்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்த்வார் துபே. இவரது பதவிக் காலம் 2026 வரை இருந்த நிலையில், இயற்கை எய்தினர். இதனால் செப்டம்பர் 15-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தினேஷ் சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், 2017 முதல் 2022 வரை யோகி ஆதித்யநாத் ஆட்சியில் துணை முதல்வராகப் பதவி வகித்தவர்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரஜேஷ் பதாக், கேஷவ் பிரசாத் மயூரா உள்ளிட்டோர் முன்னிலையில் தினேஷ் சர்மா வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், தினேஷ் சர்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற தினேஷ் சர்மா பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், ஆசிரியரான என்னை ஆசிரியர் தினத்தன்று மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.