செப்டம்பர் 3 சனாதன நாள்: அமெரிக்க மேயர் அறிவிப்பு!
Nov 15, 2025, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

செப்டம்பர் 3 சனாதன நாள்: அமெரிக்க மேயர் அறிவிப்பு!

உதயநிதிக்குச் சுட்டிக் காட்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ

Web Desk by Web Desk
Sep 6, 2023, 09:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று, மாநகர மேயர் அறிவித்திருப்பதாக துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சீண்டி இருக்கிறார்.

அமெரிக்காவின் கென்டக்கியின் லூயில்வில்லி மாநகரில் இந்து கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவில் ரிஷிகேஷில் உள்ள பார்மார்த் நிகேதன் பீடத் தலைவர் சிதானந்த் சரஸ்வதி, ரவிசங்கர், பக்வதி சரஸ்வதி உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்களும், நகர துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித், துணை கவர்னர் ஜாக்லின் கோல்மென் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மாநகர மேயர் அறிவித்திருப்பதாக, துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, இத்தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கேட்டுச்சா உதயநிதி ஸ்டாலின் அவர்களே… செப்டம்பர் 3-ம் தேதியை சனாதன நாளாக அறிவித்த அமெரிக்காவின் லூயிஸ்வில்லி மாகாணத்தின் மேயருக்கு நன்றி. அமெரிக்காவின் கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லி மாகாணத்தில் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கொண்டாடப்படும் என்று நகர மேயர் அறிவித்திருக்கிறார். இதுவே சனாதனத்தின் பெருமை! உலகெல்லாம் பரந்து விரிந்திருக்கும் சனாதனத்தின் பெருமையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கேட்டுச்சா @Udhaystalin அவர்களுக்கு….

செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக அறிவித்த அமெரிக்க லூயிஸ்வில்லி மாகாணத்தின் மேயருக்கு நன்றி!

அமெரிக்காவின் கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லி மாகாணத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக கொண்டாடப்படும் என்று அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.… pic.twitter.com/PDqh98bb3A

— Vanathi Srinivasan (@VanathiBJP) September 6, 2023

 

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் உதயநிதிக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்ததும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உதயநிதியின் தலைக்கு அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Mayoramericaudayanidhivanathi srinivasan bjpsanadhan dharma
ShareTweetSendShare
Previous Post

“இண்டியா” அபாயகரமான வார்த்தை!

Next Post

பிளவு விதைகளை விதைக்கிறது காங்கிரஸ் கட்சி!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies