செப்டம்பர் 3 சனாதன நாள்: அமெரிக்க மேயர் அறிவிப்பு!
Mar 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

செப்டம்பர் 3 சனாதன நாள்: அமெரிக்க மேயர் அறிவிப்பு!

உதயநிதிக்குச் சுட்டிக் காட்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 6, 2023, 09:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று, மாநகர மேயர் அறிவித்திருப்பதாக துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சீண்டி இருக்கிறார்.

அமெரிக்காவின் கென்டக்கியின் லூயில்வில்லி மாநகரில் இந்து கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவில் ரிஷிகேஷில் உள்ள பார்மார்த் நிகேதன் பீடத் தலைவர் சிதானந்த் சரஸ்வதி, ரவிசங்கர், பக்வதி சரஸ்வதி உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்களும், நகர துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித், துணை கவர்னர் ஜாக்லின் கோல்மென் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மாநகர மேயர் அறிவித்திருப்பதாக, துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, இத்தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கேட்டுச்சா உதயநிதி ஸ்டாலின் அவர்களே… செப்டம்பர் 3-ம் தேதியை சனாதன நாளாக அறிவித்த அமெரிக்காவின் லூயிஸ்வில்லி மாகாணத்தின் மேயருக்கு நன்றி. அமெரிக்காவின் கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லி மாகாணத்தில் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கொண்டாடப்படும் என்று நகர மேயர் அறிவித்திருக்கிறார். இதுவே சனாதனத்தின் பெருமை! உலகெல்லாம் பரந்து விரிந்திருக்கும் சனாதனத்தின் பெருமையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கேட்டுச்சா @Udhaystalin அவர்களுக்கு….

செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக அறிவித்த அமெரிக்க லூயிஸ்வில்லி மாகாணத்தின் மேயருக்கு நன்றி!

அமெரிக்காவின் கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லி மாகாணத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக கொண்டாடப்படும் என்று அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.… pic.twitter.com/PDqh98bb3A

— Vanathi Srinivasan (@VanathiBJP) September 6, 2023

 

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் உதயநிதிக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்ததும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உதயநிதியின் தலைக்கு அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Mayoramericaudayanidhivanathi srinivasan bjpsanadhan dharma
ShareTweetSendShare
Previous Post

“இண்டியா” அபாயகரமான வார்த்தை!

Next Post

பிளவு விதைகளை விதைக்கிறது காங்கிரஸ் கட்சி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies