செப்டம்பர் 3 சனாதன நாள்: அமெரிக்க மேயர் அறிவிப்பு!
Aug 6, 2025, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

செப்டம்பர் 3 சனாதன நாள்: அமெரிக்க மேயர் அறிவிப்பு!

உதயநிதிக்குச் சுட்டிக் காட்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ

Web Desk by Web Desk
Sep 6, 2023, 09:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று, மாநகர மேயர் அறிவித்திருப்பதாக துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சீண்டி இருக்கிறார்.

அமெரிக்காவின் கென்டக்கியின் லூயில்வில்லி மாநகரில் இந்து கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவில் ரிஷிகேஷில் உள்ள பார்மார்த் நிகேதன் பீடத் தலைவர் சிதானந்த் சரஸ்வதி, ரவிசங்கர், பக்வதி சரஸ்வதி உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்களும், நகர துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித், துணை கவர்னர் ஜாக்லின் கோல்மென் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மாநகர மேயர் அறிவித்திருப்பதாக, துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, இத்தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கேட்டுச்சா உதயநிதி ஸ்டாலின் அவர்களே… செப்டம்பர் 3-ம் தேதியை சனாதன நாளாக அறிவித்த அமெரிக்காவின் லூயிஸ்வில்லி மாகாணத்தின் மேயருக்கு நன்றி. அமெரிக்காவின் கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லி மாகாணத்தில் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கொண்டாடப்படும் என்று நகர மேயர் அறிவித்திருக்கிறார். இதுவே சனாதனத்தின் பெருமை! உலகெல்லாம் பரந்து விரிந்திருக்கும் சனாதனத்தின் பெருமையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கேட்டுச்சா @Udhaystalin அவர்களுக்கு….

செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக அறிவித்த அமெரிக்க லூயிஸ்வில்லி மாகாணத்தின் மேயருக்கு நன்றி!

அமெரிக்காவின் கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லி மாகாணத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக கொண்டாடப்படும் என்று அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.… pic.twitter.com/PDqh98bb3A

— Vanathi Srinivasan (@VanathiBJP) September 6, 2023

 

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் உதயநிதிக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்ததும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உதயநிதியின் தலைக்கு அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americaudayanidhivanathi srinivasan bjpsanadhan dharmaMayor
ShareTweetSendShare
Previous Post

“இண்டியா” அபாயகரமான வார்த்தை!

Next Post

பிளவு விதைகளை விதைக்கிறது காங்கிரஸ் கட்சி!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies