திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை- அண்ணாமலை
Jan 14, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Sep 7, 2023, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழலை, டாஸ்மாக்கை, ஏழ்மையை, வறுமையை ஒழிப்போம் என்று சொன்னால், திமுகவோடு கைகோர்க்க தயார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்றைய என் மண் என் மக்கள் பயணம், தமிழகத்திலே ஒரு அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காக, பெரும் திரளெனக் கூடி ஆதரவு தெரிவித்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது.

கடந்த 9 ஆண்டுகளில் நம் பாரத நாடு, நல்ல ஒரு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த போது, உலக அளவில், பொருளாதாரத்தில் 11வது நாடாக இருந்த நம் பாரதம், இப்பொழுது 5 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

பாஜக ஆட்சியில் நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கொடுத்து பாரதிய ஜனதா கட்சி பெருமை சேர்த்துள்ளது.

ஆனால் தமிழகத்தில், கடந்த 30 மாதங்களாக, ஒரு குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி நடக்கிறது. தினமும் செய்திகளில், கொலை, கொள்ளை, டாஸ்மாக், கஞ்சா, தண்ணீர், ஊழல் பிரச்சனைகள் பற்றிய செய்திகளையே பார்க்கிறோம்.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் தொகை 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழக முதலமைச்சர், நிதி எதுவுமே வரவில்லை என்று பொய் கூறுகிறார்.

இன்று கூடியிருந்த இளைஞர்கள் அனைவருமே முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் சொந்த உழைப்பில் முன்னேறுபவர்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின், அவரது தாத்தா மற்றும் அப்பாவின் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அமைச்சர் பி டி ஆர் கூறியது போல, 28 மாதத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மூலம்… pic.twitter.com/yfzmXjb89Y

— K.Annamalai (@annamalai_k) September 6, 2023

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்கிறார் உதயநிதி ஸ்டாலின். சனாதன தர்மம் என்பது அனைத்து மனிதனையும் சமமாக பார்ப்பதே. சனாதன தர்மம் என்பது நம் வாழ்வியல் முறை.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்றால், அதனை பாஜக ஆதரிக்காது. இப்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் திமுக, பின்னர் மாரியம்மனும், அய்யனாரும் வேண்டாம் என்று சொல்லும். நம் ஊரைக் காக்கும் தெய்வங்களை அழிப்பதுதான் திமுகவின் குறிக்கோள். கிறிஸ்தவ சகோதரர்கள் விழாவில் சென்று, நான் ஒரு கிறிஸ்தவன் என்கிறார். இப்போது, நான் எந்தக் கடவுளையும் நம்ப மாட்டேன் என்கிறார். யாருக்காவது உண்மையாக இருக்கிறாரா?

இன்று கூடியிருந்த இளைஞர்கள் அனைவருமே முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் சொந்த உழைப்பில் முன்னேறுபவர்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின், அவரது தாத்தா மற்றும் அப்பாவின் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அமைச்சர் பி டி ஆர் கூறியது போல, 28 மாதத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மூலம் சம்பாதித்திருக்கிறார். திமுகவில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களையாமல், இந்து மத தர்மத்தை அழிப்போம் என்று சொன்னால் அதனை அனுமதிக்க முடியாது.

ஊழலை, டாஸ்மாக்கை, ஏழ்மையை, வறுமையை ஒழிப்போம் என்று சொன்னால் நாங்களும் திமுகவோடு கைகோர்க்க தயார்.

ஆனால் அவற்றிற்கு திமுக போராடாது. திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையே கொண்டு வந்துள்ளோம்.

மத்திய அரசின் அனைத்து மானியங்களும் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு வருவதற்கு முழு காரணம் திமுக போன்றவர்கள் செய்யும் ஊழலை ஒழிப்பதற்காக தான். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஊழலற்ற, நல்லாட்சி தொடர வேண்டும்.
சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும்.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடி வெற்றியில் தமிழகமும் பெரும்பங்காற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiannamalai en maan en makkal
ShareTweetSendShare
Previous Post

பிரிவினை வாத கும்பலின் தலைவர்கள் ஸ்டாலின், உதயநிதி : அண்ணாமலை.

Next Post

உலக வளர்ச்சியில் “ஆசியான்” முக்கியப் பங்கு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies