"பாரத்" பெயர் மாற்றம்: ஐ.நா. கருத்து!
Jan 14, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பாரத்” பெயர் மாற்றம்: ஐ.நா. கருத்து!

கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பாரத்” என்ற பெயர் மாற்றம் தொடர்பாக, இந்தியாவிடமிருந்து கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

நாட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம் “இந்தியா”, “பாரத்” பெயர் மாற்றம். அதாவது, வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். இவர்களை கௌரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 9-ம் தேதி இரவு விருந்து அளிக்கப்படுகிறது.

இந்த விருந்து தொடர்பாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. அந்த அழைப்பிதழில் “தி பிரசிடென்ட் ஆஃப் இந்தியா” என்பதற்கு பதிலாக “தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்” என்று அச்சிடப்பட்டிருந்தது.

அதேபோல, இந்தோனேஷியாவில் ஆசியான் இந்தியா மாநாடும், கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு  இந்தோனேஷியா புறப்பட்டுச் சென்றார். இவரது பயணம் தொடர்பான அழைப்பிதழிலும், “தி பிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா” என்பதற்கு பதிலாக “தி பிரைம் மினிஸ்டர் ஆஃப் பாரத்” என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்தியாவின் பெயரை பாரத் என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மாற்றப் போவதாகவும், இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், வரும் 18-ம் தேதி நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வதந்தியை கிளப்பி விட்டன. இதனால், நாட்டில் ஒருவித அசாதாரண சூழல் நிலவியது.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, பியூஸ் கோயல் ஆகியோர் இது வெறும் வதந்தி என்று தெளிவுபடுத்தினர். அதேசமயம், நாட்டிலுள்ள பல்வேறு பிரபலங்கள் “பாரத்” பெயர் மாற்றத்திற்கு அமோக ஆதரவைத் தெரிவித்தனர். குறிப்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆதரவு தெரிவித்து கருத்துப் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “துருக்கி நாடு துருகியே என்று கடந்த வருடம் பெயர் மாற்றப்பட்டது. இதற்கு அந்நாட்டு அரசிடம் இருந்து முறைப்படி எங்களுக்கு கோரிக்கை வந்தது. அதனடிப்படையில் பெயர் மாற்றப்பட்டது. அதேபோல், இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் பரிசீலிப்போம்” என்று தெரிவித்ததாக, ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியிருக்கிறார்.

Tags: IndiaBHARATHNAME CHANGEU.N.
ShareTweetSendShare
Previous Post

பொருளாதாரக் குற்றவாளிகளிடமிருந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது!-ஜிதேந்திர சிங்

Next Post

சனாதனம்: ஆ.ராசாவுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies