விண்ணில் பாய்ந்தது "ஸ்லிம்" விண்கலம்!
Sep 29, 2025, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்ணில் பாய்ந்தது “ஸ்லிம்” விண்கலம்!

3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 4-வது முறை வெற்றிகரமாக ஏவப்பட்டது!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 12:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை ஆய்வு செய்வதற்காக, விண்ணில் செலுத்த 3 முறை திட்டமிட்டப்பட்டு, மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஜப்பான் நாட்டின் “ஸ்லிம்” விண்கலம் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்ய ஏற்கெனவே விண்கலத்தை அனுப்பி இருந்தன. இதைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக  விண்ணில செலுத்தியது. இந்த விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுத், தற்போது தனது ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்த ஆய்வில் நிலவில் கந்தகம் உள்ளிட்ட பல்வேறு கனிமங்களும், உறைந்த நிலையில் தண்ணீரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் விண்வெளி ஆய்வு மையமும் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப முடிவு செய்தது. இதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ‘ஸ்லிம்’ என்கிற விண்கலத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் சமீபத்தில் உருவாக்கினர். இந்த விண்கலத்தை எச்.2-ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த கடந்த மாதம் மட்டும் 3 முறை திட்டமிடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ராக்கெட் ஏவுதல் 3 முறையும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில், செப்டம்பர் 7-ம் தேதியான இன்று “ஸ்லிம்” விண்கலத்தை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2-ஏ என்கிற ராக்கெட் மூலம் “ஸ்லிம்” விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 4 முதல் 6 மாதங்களில் நிலவைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த விண்கலம் நிலவின் பாறைகளை ஆராய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் கூறுகையில், “ராக்கெட் ஏவப்பட்ட 13 நிமிடங்களுக்குப் பிறகு எக்ஸ்ரே இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ் கோபி மிஷன் என்கிற செயற்கைக்கோள், பூமியின் சுற்று வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. இது விண்மீன் திரள்களுக்கு இடையே உள்ளவற்றின் வேகத்தை ஆராயும். இந்த தகவல் மூலம் வான் பொருட்கள் உருவானது எப்படி என்பதை கண்டறியப்படும். மேலும், பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்கிற மர்மத்தைத் தீர்க்கவும் வழி வகுக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

இத்திட்டத்தில் ஜப்பான் நாடு வெற்றி பெற்றால் நிலவில் விண்கலத்தைத்  தரையிறக்கிய 5-வது நாடாக இருக்கும்.

Tags: japanLAUNCHSLIMSPACECRAFT
ShareTweetSendShare
Previous Post

இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

Next Post

14 அரிய வகை பாம்புகள் பறிமுதல்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies