சனாதனம் : ஆ.ராசாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!
Mar 15, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சனாதனம் : ஆ.ராசாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 12:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் குறித்து தவறான கருத்தை ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு விழாவில், கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி, ஆ.ராசா, திராவிட இயக்கங்களால்தான் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார் என்று பேசினார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிட இயங்களால் நான் ஆளுநராகவில்லை. மாறாக, நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.

ஒருவரது முன்னேற்றத்தில் மற்றவர்களுக்குப் பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் அது சரியான கருத்தாக இருக்கலாம். அதில், எனக்கு உடன்பாடு இல்லை. நான் மருத்துவக் கல்லூரியில் நன்றாக படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிலும் படித்தேன். அதில், வெற்றியும் பெற்றேன். இதுதான் உண்மை.

சனாதனம் என்றால் தவறான கருத்தை ஆ.ராசா போன்ற திமுகவினர் பரப்பி வருகின்றனர். இதற்கு உதாரணமாக ஆ.ராசாவை குறிப்பிடலாம். அவர், இப்போது மட்டுமல்ல, எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார்.

சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல், உதயநிதி அதைப்பற்றி பேசக்கூடாது. சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கிறார்கள். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள்.

திமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவிக்கு வரமுடியுமா? உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.உதயநிதியைவிட நன்றாக உழைத்தவர்கள் யாருமே திமுக-வில் இல்லையா? என கேள்வி எழுப்பியவர்,

திமுகவில் உதயநிதி போன்றவர்கள் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடிகிறது. ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? அல்லது முதல்வராகவோ ஆக்கிவிட முடியுமா?

தமிழ்நாடில் கல்வியின் தரம் உயர்ந்ததற்கு காரணம் காமராஜர். அது அவர் போட்ட விதை. செய்யாததை எல்லாம் நீங்களே செய்ததாக திமுகவினர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

Tags: thamizhisai governer
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா கிரீன் கார்டு : காத்திருக்கும் இந்தியர்கள்!

Next Post

திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies