சனாதனம் : ஆ.ராசாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!
Jan 14, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சனாதனம் : ஆ.ராசாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 12:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் குறித்து தவறான கருத்தை ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு விழாவில், கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி, ஆ.ராசா, திராவிட இயக்கங்களால்தான் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார் என்று பேசினார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிட இயங்களால் நான் ஆளுநராகவில்லை. மாறாக, நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.

ஒருவரது முன்னேற்றத்தில் மற்றவர்களுக்குப் பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் அது சரியான கருத்தாக இருக்கலாம். அதில், எனக்கு உடன்பாடு இல்லை. நான் மருத்துவக் கல்லூரியில் நன்றாக படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிலும் படித்தேன். அதில், வெற்றியும் பெற்றேன். இதுதான் உண்மை.

சனாதனம் என்றால் தவறான கருத்தை ஆ.ராசா போன்ற திமுகவினர் பரப்பி வருகின்றனர். இதற்கு உதாரணமாக ஆ.ராசாவை குறிப்பிடலாம். அவர், இப்போது மட்டுமல்ல, எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார்.

சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல், உதயநிதி அதைப்பற்றி பேசக்கூடாது. சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கிறார்கள். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள்.

திமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவிக்கு வரமுடியுமா? உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.உதயநிதியைவிட நன்றாக உழைத்தவர்கள் யாருமே திமுக-வில் இல்லையா? என கேள்வி எழுப்பியவர்,

திமுகவில் உதயநிதி போன்றவர்கள் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடிகிறது. ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? அல்லது முதல்வராகவோ ஆக்கிவிட முடியுமா?

தமிழ்நாடில் கல்வியின் தரம் உயர்ந்ததற்கு காரணம் காமராஜர். அது அவர் போட்ட விதை. செய்யாததை எல்லாம் நீங்களே செய்ததாக திமுகவினர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

Tags: thamizhisai governer
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா கிரீன் கார்டு : காத்திருக்கும் இந்தியர்கள்!

Next Post

திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies