சனாதனம் : ஆ.ராசாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!
Sep 13, 2026, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சனாதனம் : ஆ.ராசாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 12:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதனம் குறித்து தவறான கருத்தை ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு விழாவில், கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி, ஆ.ராசா, திராவிட இயக்கங்களால்தான் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார் என்று பேசினார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிட இயங்களால் நான் ஆளுநராகவில்லை. மாறாக, நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.

ஒருவரது முன்னேற்றத்தில் மற்றவர்களுக்குப் பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் அது சரியான கருத்தாக இருக்கலாம். அதில், எனக்கு உடன்பாடு இல்லை. நான் மருத்துவக் கல்லூரியில் நன்றாக படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிலும் படித்தேன். அதில், வெற்றியும் பெற்றேன். இதுதான் உண்மை.

சனாதனம் என்றால் தவறான கருத்தை ஆ.ராசா போன்ற திமுகவினர் பரப்பி வருகின்றனர். இதற்கு உதாரணமாக ஆ.ராசாவை குறிப்பிடலாம். அவர், இப்போது மட்டுமல்ல, எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார்.

சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல், உதயநிதி அதைப்பற்றி பேசக்கூடாது. சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கிறார்கள். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள்.

திமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவிக்கு வரமுடியுமா? உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.உதயநிதியைவிட நன்றாக உழைத்தவர்கள் யாருமே திமுக-வில் இல்லையா? என கேள்வி எழுப்பியவர்,

திமுகவில் உதயநிதி போன்றவர்கள் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடிகிறது. ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? அல்லது முதல்வராகவோ ஆக்கிவிட முடியுமா?

தமிழ்நாடில் கல்வியின் தரம் உயர்ந்ததற்கு காரணம் காமராஜர். அது அவர் போட்ட விதை. செய்யாததை எல்லாம் நீங்களே செய்ததாக திமுகவினர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

Tags: thamizhisai governer
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா கிரீன் கார்டு : காத்திருக்கும் இந்தியர்கள்!

Next Post

திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies