மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 300-க்கும் மேற்பட்டோர் பலி!
Oct 14, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 300-க்கும் மேற்பட்டோர் பலி!

நள்ளிரவில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் தூக்கத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!

Web Desk by Web Desk
Sep 9, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நள்ளிரவில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் தூக்கத்திலேயே மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில், நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கும் மராகேஷ் பகுதியிலுள்ள அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.40) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 19 நிமிடங்களுக்கு நீடித்திருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் மராகேஷ், சிச்சாவ்வா, தாரூடேன்ட், அல் ஹவுஸ், ஓவர்சாசேட், அஜிலால் ஆகிய பகுதிகளில் இருந்த ஏராளமான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுக்கள் போல சரிந்து விழுந்தன. இச்சம்பவத்தில் 300 பேர் உயிரிழந்ததாகவும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இடிபாடுகளுக்கிடையே இன்னும் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, நிலநடுக்கம் காரணமாக, மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மேலும், நில நடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இந்த நிலையில், மொராக்கோ நிலநடுக்கம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் காணொளிகள் பரவி வருகின்றன. அதில், கட்டடங்கள் குலுங்குவது, மக்கள் பீதியுடன் அலறியபடியே வீதிகளில் ஓடிவருவது, இடிந்த கட்டடங்கள், இடிபாடுகளுடன் கூடிய தெருக்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு முன்பும் மொராக்கோவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றன. 2004-ம் ஆண்டு வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். 1980-ல் எல்.அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: earthquakemoroccomarakeshkills 300
ShareTweetSendShare
Previous Post

சீனாவை முந்தும் இந்தியா!

Next Post

ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!

Related News

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

ரூ.17 கோடி மதிப்புள்ள கைப்பையுடன் விருந்தில் கலந்து கொண்ட நீடா அம்பானி!

சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த திருமாவளவன்!

ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே ரொனால்டோ திகழ்கிறார் – எம்பாப்வே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies