மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 300-க்கும் மேற்பட்டோர் பலி!
Aug 21, 2025, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 300-க்கும் மேற்பட்டோர் பலி!

நள்ளிரவில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் தூக்கத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!

Web Desk by Web Desk
Sep 9, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நள்ளிரவில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் தூக்கத்திலேயே மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில், நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கும் மராகேஷ் பகுதியிலுள்ள அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.40) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 19 நிமிடங்களுக்கு நீடித்திருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் மராகேஷ், சிச்சாவ்வா, தாரூடேன்ட், அல் ஹவுஸ், ஓவர்சாசேட், அஜிலால் ஆகிய பகுதிகளில் இருந்த ஏராளமான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுக்கள் போல சரிந்து விழுந்தன. இச்சம்பவத்தில் 300 பேர் உயிரிழந்ததாகவும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இடிபாடுகளுக்கிடையே இன்னும் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, நிலநடுக்கம் காரணமாக, மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மேலும், நில நடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இந்த நிலையில், மொராக்கோ நிலநடுக்கம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் காணொளிகள் பரவி வருகின்றன. அதில், கட்டடங்கள் குலுங்குவது, மக்கள் பீதியுடன் அலறியபடியே வீதிகளில் ஓடிவருவது, இடிந்த கட்டடங்கள், இடிபாடுகளுடன் கூடிய தெருக்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு முன்பும் மொராக்கோவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றன. 2004-ம் ஆண்டு வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். 1980-ல் எல்.அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: marakeshkills 300earthquakemorocco
ShareTweetSendShare
Previous Post

சீனாவை முந்தும் இந்தியா!

Next Post

ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies