மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 300-க்கும் மேற்பட்டோர் பலி!
Jun 14, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 300-க்கும் மேற்பட்டோர் பலி!

நள்ளிரவில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் தூக்கத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 9, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நள்ளிரவில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் தூக்கத்திலேயே மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில், நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கும் மராகேஷ் பகுதியிலுள்ள அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.40) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 19 நிமிடங்களுக்கு நீடித்திருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் மராகேஷ், சிச்சாவ்வா, தாரூடேன்ட், அல் ஹவுஸ், ஓவர்சாசேட், அஜிலால் ஆகிய பகுதிகளில் இருந்த ஏராளமான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுக்கள் போல சரிந்து விழுந்தன. இச்சம்பவத்தில் 300 பேர் உயிரிழந்ததாகவும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இடிபாடுகளுக்கிடையே இன்னும் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, நிலநடுக்கம் காரணமாக, மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மேலும், நில நடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இந்த நிலையில், மொராக்கோ நிலநடுக்கம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் காணொளிகள் பரவி வருகின்றன. அதில், கட்டடங்கள் குலுங்குவது, மக்கள் பீதியுடன் அலறியபடியே வீதிகளில் ஓடிவருவது, இடிந்த கட்டடங்கள், இடிபாடுகளுடன் கூடிய தெருக்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு முன்பும் மொராக்கோவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றன. 2004-ம் ஆண்டு வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். 1980-ல் எல்.அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: earthquakemoroccomarakeshkills 300
ShareTweetSendShare
Previous Post

சீனாவை முந்தும் இந்தியா!

Next Post

ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies