இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!
Oct 6, 2025, 11:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 வெற்றிபெற்றதற்கு பாராட்டு!

Web Desk by Web Desk
Sep 9, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3, வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்கும்,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்பி இருந்தன. ஆகவே, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி அனுப்பியது. அதேசமயம், இந்தியாவுக்கு முன்னதாகவே நிலவின் தென் துருவத்தை தொட்டுவிட வேண்டும் என்று லூனா-25 என்கிற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது.  ஆனால், இந்த விண்கலம் நிலவில் தரையிற்குவதற்கு முன்னதாகவே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விட்டது.

அதேசமயம், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள் இந்தியாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தன. இந்த வெற்றிக் களிப்போடு, சூட்டோடு சூடாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இத்திட்டம் வெற்றியடைந்தால் இந்தியாவுக்கு இன்னொரு மணிமகுடம் சூட்டப்படும்.

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது வரலாற்று சாதனை என்று பாராட்டிய ஜோ பைடன், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், விண்வெளி ஆய்வில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இரு நாட்டுத் தலைவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: PM ModiChandrayaan 3Joe BidencongradulatesSuccess
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!

Next Post

ஜி20 உச்சிமாநாடு: உலகில் மிகப் பெரிய மணல் சிற்பம்!

Related News

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய திமுக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை : கே.பி.ராமலிங்கம்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத்

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies