இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!
Aug 21, 2025, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 வெற்றிபெற்றதற்கு பாராட்டு!

Web Desk by Web Desk
Sep 9, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3, வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்கும்,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்பி இருந்தன. ஆகவே, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி அனுப்பியது. அதேசமயம், இந்தியாவுக்கு முன்னதாகவே நிலவின் தென் துருவத்தை தொட்டுவிட வேண்டும் என்று லூனா-25 என்கிற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது.  ஆனால், இந்த விண்கலம் நிலவில் தரையிற்குவதற்கு முன்னதாகவே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விட்டது.

அதேசமயம், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள் இந்தியாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தன. இந்த வெற்றிக் களிப்போடு, சூட்டோடு சூடாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இத்திட்டம் வெற்றியடைந்தால் இந்தியாவுக்கு இன்னொரு மணிமகுடம் சூட்டப்படும்.

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது வரலாற்று சாதனை என்று பாராட்டிய ஜோ பைடன், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், விண்வெளி ஆய்வில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இரு நாட்டுத் தலைவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: Chandrayaan 3Joe BidencongradulatesSuccessPM Modi
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதி ஆய்வு: மேலும் 4 வாரங்களுக்கு அனுமதி!

Next Post

ஜி20 உச்சிமாநாடு: உலகில் மிகப் பெரிய மணல் சிற்பம்!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies