பயங்கரவாதத்தை வேரறுக்க உலகத் தலைவர்கள் முடிவு!
Jul 26, 2025, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்தை வேரறுக்க உலகத் தலைவர்கள் முடிவு!

ஜி20 மாநாட்டு தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

Web Desk by Web Desk
Sep 9, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும், அதை ஒழித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று உலகத் தலைவர்கள் தெரிவித்ததாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி20 அமைப்பின் ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “ஜி20 புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தளம் அல்ல. அதேசமயம், உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, உக்ரைனில் நடந்து வரும் போர், கொரோனா தொற்றுநோய் ஆகியவை வளரும் நாடுகளில் ஏற்படுத்திய தாக்கத்தையும், பொருளாதார சீர்குலைவில் இருந்து மீண்டு வருவதைப் பற்றியும் ஜி20 தலைவர்கள் விவாதித்தனர்.

மேலும், உணவு, எரிபொருள் மற்றும் உரங்கள் ஆகியவை சிறப்பு கவனம் செலுத்த வேண்டியவை என்று தெரிவித்தனர். அதேபோல, ஜி20 தலைவர்கள் உரையாற்றிய மற்றொரு விஷயம் பயங்கரவாதம் மற்றும் பணமோசடியை எதிர்கொள்வது பற்றியது. பயங்கரவாதம் எந்த வடிவங்களில் வந்தாலும், அதை ஒழிக்க வேண்டியது கட்டாயம். ஏனெனில், அது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலானது என்று தெரிவித்தனர்.

ஜி20 நடவடிக்கைகளில் இளைஞர்களிடையே அதிக ஆர்வம் இருக்கிறது. இது இந்தியாவின் கலாச்சாரம், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்தியாவை உலகத்திற்கு தயார்நிலையிலும், உலகை இந்தியாவுக்குத் தயார்படுத்துவதற்கும் ஜி20 பங்களித்துள்ளது. தலைவர்கள் ஒப்புக்கொண்ட பிரகடனம், வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. நிலையான எதிர்காலத்திற்கான பசுமை வளர்ச்சி ஒப்பந்தத்தை எதிர்பார்க்கிறது. நிலையான வளர்ச்சிக்கான வாழ்க்கை முறை குறித்த உயர்மட்டக் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது” என்று ஜெய்சங்கர் கூறினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “டெல்லி தலைவர்களின் பிரகடனத்திற்கு ஜி20 உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கு ​​நன்றி. உலகளாவிய வளர்ச்சிக்கான மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறை சர்வதேச சமூகத்துடன் வலுவாக எதிரொலித்தது” என்றார்.

ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் கூறுகையில், “டெல்லி தலைவர்களின் அறிவிப்பின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று. பெண்கள் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் நாங்கள் சாதித்துள்ளோம் என்று நான் நினைக்கிறேன். பாலினத்தை உள்ளடக்கிய காலநிலை நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பெண்களின் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் முற்றிலும் பெரிய கவனம் செலுத்தப்படுகிறது” என்றார்.

Tags: JaishankardelhiNirmala SitharamanG20interview
ShareTweetSendShare
Previous Post

துறைமுகம் மதுரவாயல் பாலம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் – நிதின் கட்கரி!

Next Post

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் தொடக்கம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies