துறைமுகம் மதுரவாயல் பாலம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் - நிதின் கட்கரி!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறைமுகம் மதுரவாயல் பாலம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் – நிதின் கட்கரி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 9, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, உயர் மட்ட பாலத்தில், ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் என்று மத்திய சாலைப்  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 -ம் ஆண்டு, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் இப்பணிகள் தாமதமானது.

கடந்த 2021-ம் ஆண்டு உயர்மட்ட சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த உயர் மட்ட பறக்கும் சாலை, இரண்டு அடுக்கு கொண்டதாகும். ரூ.5,721.33 கோடி மதிப்பீட்டில், மேம்பால பணிகள் 4 பகுதிகளாகப் பிரித்து செயல்படுத்தப்படும். மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும்.

இந்த மேம்பாலம் துறைமுக வளாகத்தில் தொடங்கி, கோயம்பேடு வரை செல்கிறது. பின்னர், தற்போதைய பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படும்.

துறைமுகத்தை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மேலே உள்ள பாலத்தில் செல்லும். சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் வழியாக மேம்பாலம் செல்லும். இதில், மொத்தம் 13 பகுதிகளில் உள்ளே நுழைவும், வெளியேறவும் முடியும்.

இந்த திட்டத்திற்குச் சுற்றுச்சூழல், இரயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, உயர் மட்ட பாலத்தில், ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் முழு வடிவம் பெறும்போது சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே போக்குவரத்துப் பிரச்சினை அடியோடு தீரும்.

Tags: Nitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

கருடன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த பொதுமக்கள் – என்ன காரணம் தெரியுமா?

Next Post

பயங்கரவாதத்தை வேரறுக்க உலகத் தலைவர்கள் முடிவு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies