இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் தொடக்கம்!
Jan 14, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் தொடக்கம்!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 9, 2023, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையேயான் பொருளாதார இணைப்பு வழித்தடத் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல் நாளான இன்று, மற்ற நாடுகளுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக, ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் மற்ற உலகத் தலைவர்களும் இவ்வழித்தடத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த வழித்தடத் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “இந்த ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. வர்த்தக இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இது ஒரு புதிய திசையை கொடுக்கும். வரும் காலங்களில், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு இந்த வழித்தடம் ஒரு பயனுள்ள பாதையாக மாறும்” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், “இது மிகச்சிறந்த திட்டம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒரே பூமி, ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்பது தான் ஜி20 மாநாட்டில் சுவனம் செலுத்தப்பட்டது. இன்று நாம் பேசும் கூட்டாண்மையும் இதுதான். நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குதல், வளமான உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குதல் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

இந்த கொள்கையை அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் ஏற்றுக்கொண்டு, இதனை நிஜமாக்குவதற்கான முக்கிய வழிகளை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்ய நாங்கள் பணியாற்றும்போது, நமது முதலீடுகளின் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதனால்தான் சில மாதங்களுக்கு எங்களது நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா, பொருளாதார காரிடர்களில் முதலீடு செய்யும் என்று அறிவித்தோம்” என்றார்.

யுரேசியா குழுமத்தின் தெற்காசிய பயிற்சித் தலைவர் பிரமித் பால் சௌதுரி கூறுகையில், “மும்பையிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் கப்பல் கொள்கலன்களை, எதிர்காலத்தில் துபாயிலிருந்து இஸ்ரேல் வழியாக ஐரோப்பாவிற்கு இரயில் மூலம் எடுத்து செல்ல முடியும். இந்த கணிப்பு உண்மையாகி விட்டால், பணமும் நேரமும் மிச்சமாகும்” என்றார்.

சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பேசும்போது, “இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் பொருளாதார வழித்தடம் மற்றும் அதற்கான திட்டங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை எதிர்பார்க்கிறோம். இந்த முக்கியமான பொருளாதார வழித்தடத்தை நிறுவுவதற்கு அடிப்படைக் கட்டமைப்பை எட்ட எங்களுடன் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

அதேபோல, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனும் இத்திட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாராட்டினார்.

சர்வதேச வழித்தடம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் இரயில்வே மற்றும் துறைமுக வசதிகளை இந்தியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க உள்ளது. இத்திட்டத்தினால் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM ModiG20 summitJoe BidenIndia-Middle East-Europemega corridor dealannounced
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்தை வேரறுக்க உலகத் தலைவர்கள் முடிவு!

Next Post

உரலார்… உலக்கையார்… உதயநிதிக்கு பதிலடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies