உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!
Jan 14, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!

சாலையோர மற்றும் சிறுதானிய உணவுகள் பரிமாற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று இரவு விருந்து அளித்தார். இவ்விருந்தில் சாலையோர மற்றும் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்கள் என மொத்தம் 170 பேர் விருந்தில் கலந்துகொண்டனர்.

ஜி20 அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகித்திருக்கிறது. இதையொட்டி, ஜி20 அமைப்பின் பல்வேறு பிரிவுகளின் மாநாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தன. முக்கிய நிகழ்வான ஜி20 உச்சி மாநாடு, நேற்று தொடங்கியது. இதற்காக, ஜி20 அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக 20 நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களை கௌரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று இரவு விருந்தளித்தார்.

இந்த விருந்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்கள் உள்ளிட்ட 170 பேர் கலந்துகொண்டனர். விருந்துக்கு வந்த உலக நாடுகளின் தலைவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். விருந்தின்போது, 50-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இசைக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்தில் நமது பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் சைவ மற்றும் அசைவ உணவுகள் இடம்பெற்றன. குறிப்பாக, இந்தியாவில் பிரபலமான சாலையோர உணவு வகைகளான பானி பூரி, சாட், மகாராஷ்டிராவில் பிரபலமான பாவ் பாஜி, தமிழகத்தின் பணியாரம், பீகாரின் சோக்கா மற்றும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட இட்லி, புலாவ் உள்ளிட்ட பல்வேறு வகைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், பரிமாறப்பட்ட ஒவ்வொரு உணவின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு பகுதியும் மெனுவில் இடம்பெற்றிருந்தது.

ஜி20 விருந்து குறித்து பேசிய ஜி20 செயல்பாடுகளுக்கான சிறப்புச் செயலாளர் முக்தேஷ் கே பர்தேஷி, “இந்தியாவின் தெருவோர உணவுகளை உலக பிரநிதிகளிடம் கொண்டு செல்வதே ஒட்டுமொத்தமான குறிக்கோளாக இருந்தது. மேலும், சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகளை தலைவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதேசமயம், பிரதிநிதிகள் இந்தியாவின் பல்வேறு பிராந்திய உணவு வகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் விருந்திற்கான மெனு தயாரிக்கப்பட்டது” என்றார்.

Tags: PM ModiPresident Droupadi MurmuG20World Leadersdinner
ShareTweetSendShare
Previous Post

உரலார்… உலக்கையார்… உதயநிதிக்கு பதிலடி!

Next Post

ஜி20 உச்சி மாநாடு: டெல்லி பிரகடனம் ஏற்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies