உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!
Nov 18, 2025, 04:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!

சாலையோர மற்றும் சிறுதானிய உணவுகள் பரிமாற்றம்!

Web Desk by Web Desk
Sep 10, 2023, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று இரவு விருந்து அளித்தார். இவ்விருந்தில் சாலையோர மற்றும் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்கள் என மொத்தம் 170 பேர் விருந்தில் கலந்துகொண்டனர்.

ஜி20 அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகித்திருக்கிறது. இதையொட்டி, ஜி20 அமைப்பின் பல்வேறு பிரிவுகளின் மாநாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தன. முக்கிய நிகழ்வான ஜி20 உச்சி மாநாடு, நேற்று தொடங்கியது. இதற்காக, ஜி20 அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக 20 நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களை கௌரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று இரவு விருந்தளித்தார்.

இந்த விருந்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்கள் உள்ளிட்ட 170 பேர் கலந்துகொண்டனர். விருந்துக்கு வந்த உலக நாடுகளின் தலைவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். விருந்தின்போது, 50-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இசைக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்தில் நமது பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் சைவ மற்றும் அசைவ உணவுகள் இடம்பெற்றன. குறிப்பாக, இந்தியாவில் பிரபலமான சாலையோர உணவு வகைகளான பானி பூரி, சாட், மகாராஷ்டிராவில் பிரபலமான பாவ் பாஜி, தமிழகத்தின் பணியாரம், பீகாரின் சோக்கா மற்றும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட இட்லி, புலாவ் உள்ளிட்ட பல்வேறு வகைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், பரிமாறப்பட்ட ஒவ்வொரு உணவின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு பகுதியும் மெனுவில் இடம்பெற்றிருந்தது.

ஜி20 விருந்து குறித்து பேசிய ஜி20 செயல்பாடுகளுக்கான சிறப்புச் செயலாளர் முக்தேஷ் கே பர்தேஷி, “இந்தியாவின் தெருவோர உணவுகளை உலக பிரநிதிகளிடம் கொண்டு செல்வதே ஒட்டுமொத்தமான குறிக்கோளாக இருந்தது. மேலும், சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகளை தலைவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதேசமயம், பிரதிநிதிகள் இந்தியாவின் பல்வேறு பிராந்திய உணவு வகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் விருந்திற்கான மெனு தயாரிக்கப்பட்டது” என்றார்.

Tags: PM ModiPresident Droupadi MurmuG20World Leadersdinner
ShareTweetSendShare
Previous Post

உரலார்… உலக்கையார்… உதயநிதிக்கு பதிலடி!

Next Post

ஜி20 உச்சி மாநாடு: டெல்லி பிரகடனம் ஏற்பு!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies