மொராக்கோ நிலநடுக்கம்: பலி 2,000!
Oct 14, 2025, 08:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கம்: பலி 2,000!

3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிப்பு!

Web Desk by Web Desk
Sep 10, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நீடித்து வரும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில், நேற்று முன்தினம் நள்ளிரவு உள்ளூர் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம், மராகேஷ் பகுதியிலுள்ள அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மராகேஷ், சிச்சாவ்வா, தாரூடேன்ட், அல் ஹவுஸ், ஓவர்சாசேட், அஜிலால் ஆகிய பகுதிகளில் இருந்த ஏராளமான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுக்கள் போல சரிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும், நள்ளிரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் குவியல் குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி விட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலநடுக்கம் குறித்து மொராக்கோ உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 2,012 பேர் பலியாகி இருக்கின்றனர். பெரும்பான்மையானவர்கள் அல் ஹவுஸ், மையப்பகுதி மற்றும் தாரூடன்ட் மாகாணங்களில் வாழ்ந்தவர்கள். மேலும், 2,059 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இவர்களில் 1,404 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 3 நாள்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொதுக் கட்டடங்களிலும் நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் யுனெஸ்கோவால் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள மதீனா என்ற சிவப்பு சுவர்களும் சேதமடைந்தது. இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அல்ஜீரியா, போர்ச்சுகல் போன்ற அண்டை நாடுகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அதேசமயம், மொரோக்கோவின் அண்டை நாடாகவும், போட்டியாளர் நாடாகவும் கருதப்படும் அல்ஜீரியா, மொராக்கோ விமானங்கள் தனது வான்வழியை பயன்படுத்த  2 ஆண்டுக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது உதவி விநியோகம் மற்றும் மருத்துவ உதவிகளைச் செயல்படுத்த ஏதுவாக தடையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.

Tags: earthquakemoroccokills 2000
ShareTweetSendShare
Previous Post

ஜி20 உச்சி மாநாடு: டெல்லி பிரகடனம் ஏற்பு!

Next Post

குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ பதிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

ரூ.17 கோடி மதிப்புள்ள கைப்பையுடன் விருந்தில் கலந்து கொண்ட நீடா அம்பானி!

சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த திருமாவளவன்!

ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே ரொனால்டோ திகழ்கிறார் – எம்பாப்வே

சூர்யகுமார் யாதவ் குடும்பத்துடன் அவ்னீத் கபூர் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies