பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!
Jul 23, 2025, 11:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களில் மட்டும் 6 புலிகள் மர்மமான முறையில் இறந்துள்ளது. எனவே, புலிகள் பலியாவதைத் தடுக்க தமிழக அரசு உடனே முன்வரவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேருநகர் பாலம் அருகே அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக எம்ரால்டு வனப்பணியாளர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாகக் கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தபோது, அதில் ஒரு புலி பெண் புலி என்பதும், அதன் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்தது. இதனால், அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பலியாகவில்லை எனத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, 3 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் 2 கால்நடை மருத்துவர்கள், இறந்துபோன புலியின் உடலை பிரதே பரிசோத நடத்த உள்ளனர்.

புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். அதன் ஆய்வு முடிவில் புலிகள் இறப்புக்கு என்ன காரணம் எனத் தெரிய வரும்.

இது தொடர்பாகப் பேசிய வன ஆர்வலர் ஒருவர், நீலகிரி வனப் பகுதியில் புலிகள் சாவு தொடர் கதையாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரங்களே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. மற்றொரு இடத்தில் மேலும் ஒரு புலி இறந்து கிடந்தது.

நடுவட்டம் தேயிலைத் தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்தது. தற்போது, அவலாஞ்சி வனப் பகுதியில் மேலும் 2 புலிகளின் செத்துக்கிடக்கின்றன. இப்படி, நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் மட்டும் 6 புலிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, புலிகளை யாராவது வேட்டையாட இது போன்ற காரியங்களில் இறங்கினார்களா? எனத் தெரியவில்லை. ஆனால், புலிகள் இறப்பில் மர்மம் உள்ளது போல் தெரிகிறது. இதற்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என வேதனையை வெளிப்படுத்தினார்.

Tags: tiger
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !

Next Post

சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies