சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!
Sep 12, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!

வன்முறையில் ஈடுபட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 11, 2023, 03:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர், வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதோடு, டயர்களையும் தீவைத்து கொளுத்தியதால், மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில், கடந்த ஆட்சியில் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவை ராஜமகேந்திரபவரத்தில் உள்ள சிறையில் நள்ளிரவு அடைத்தனர்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று மாநிலம் தழுவிய பந்த்துக்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்த பந்த்துக்கு ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் லோக் சத்தா ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பந்த் அறிவிக்கப்பட்டதால் ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவவே, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், தடையை மீறி தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும், வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வாகனங்களின் ஓட்டுனர்கள் சிலரும் காயமடைந்தனர். இது தவிர, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களையும், வாகனங்களின் டயர்களையும் சாலையில் போட்டு தீவைத்துக் கொளுத்தினர். இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக பதற்றம் நிலவுவதால் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பந்த் காரணமாக ஆந்திராவுக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள், தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பந்த்தால் பக்தர்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக திருப்பதிக்கு மட்டும் பந்த் இல்லை என்று விலக்கு அளித்துள்ளனர்.

Tags: Arrestprotestchandrababu naiduAndra Pradeshtelungu desam party
Share
Tweet
SendShare
Previous Post

பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

Next Post

13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம்- ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் பேச்சு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies