சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!
Jun 13, 2026, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!

வன்முறையில் ஈடுபட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 11, 2023, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர், வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதோடு, டயர்களையும் தீவைத்து கொளுத்தியதால், மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில், கடந்த ஆட்சியில் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவை ராஜமகேந்திரபவரத்தில் உள்ள சிறையில் நள்ளிரவு அடைத்தனர்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று மாநிலம் தழுவிய பந்த்துக்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்த பந்த்துக்கு ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் லோக் சத்தா ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பந்த் அறிவிக்கப்பட்டதால் ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவவே, ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், தடையை மீறி தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும், வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வாகனங்களின் ஓட்டுனர்கள் சிலரும் காயமடைந்தனர். இது தவிர, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களையும், வாகனங்களின் டயர்களையும் சாலையில் போட்டு தீவைத்துக் கொளுத்தினர். இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக பதற்றம் நிலவுவதால் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பந்த் காரணமாக ஆந்திராவுக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள், தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பந்த்தால் பக்தர்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக திருப்பதிக்கு மட்டும் பந்த் இல்லை என்று விலக்கு அளித்துள்ளனர்.

Tags: Andra Pradeshtelungu desam partyArrestprotestchandrababu naidu
ShareTweetSendShare
Previous Post

பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

Next Post

13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம்- ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் பேச்சு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies