பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!
Jul 28, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களில் மட்டும் 6 புலிகள் மர்மமான முறையில் இறந்துள்ளது. எனவே, புலிகள் பலியாவதைத் தடுக்க தமிழக அரசு உடனே முன்வரவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேருநகர் பாலம் அருகே அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக எம்ரால்டு வனப்பணியாளர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாகக் கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தபோது, அதில் ஒரு புலி பெண் புலி என்பதும், அதன் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்தது. இதனால், அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பலியாகவில்லை எனத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, 3 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் 2 கால்நடை மருத்துவர்கள், இறந்துபோன புலியின் உடலை பிரதே பரிசோத நடத்த உள்ளனர்.

புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். அதன் ஆய்வு முடிவில் புலிகள் இறப்புக்கு என்ன காரணம் எனத் தெரிய வரும்.

இது தொடர்பாகப் பேசிய வன ஆர்வலர் ஒருவர், நீலகிரி வனப் பகுதியில் புலிகள் சாவு தொடர் கதையாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரங்களே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. மற்றொரு இடத்தில் மேலும் ஒரு புலி இறந்து கிடந்தது.

நடுவட்டம் தேயிலைத் தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்தது. தற்போது, அவலாஞ்சி வனப் பகுதியில் மேலும் 2 புலிகளின் செத்துக்கிடக்கின்றன. இப்படி, நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் மட்டும் 6 புலிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, புலிகளை யாராவது வேட்டையாட இது போன்ற காரியங்களில் இறங்கினார்களா? எனத் தெரியவில்லை. ஆனால், புலிகள் இறப்பில் மர்மம் உள்ளது போல் தெரிகிறது. இதற்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என வேதனையை வெளிப்படுத்தினார்.

Tags: tiger
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !

Next Post

சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies