ஐ.நா.வில் சீர்திருத்தம் தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!
Oct 26, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா.வில் சீர்திருத்தம் தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

உண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலத்துக்கேற்ப நாம் மாறாவிட்டால் நமது இருப்பை இழந்துவிடுவோம். ஆகவே, உலகத்தின் உண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உட்பட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தாண்டு இந்தியா ஏற்றிருந்த நிலையில், மேற்கண்ட அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டின் மையப் பொருளாக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 3 அமர்வுகளாக நடந்த இந்த உச்சி மாநாட்டில், கடந்த 9-ம் தேதி ஒரே பூமி, ஒரே குடும்பம் என்கிற தலைப்புகளில் இரு அமர்வுகள் நடந்தன. நேற்று ஒரே எதிர்காலம் என்கிற தலைப்பில் அமர்வு நடந்தது.

இந்த அமர்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்த உலகை சிறந்த எதிர்காலத்துக்கு நாம் அழைத்துச் செல்ல வேண்டுமானால், தற்போதைய யதார்த்தங்களுக்கேற்ப உலக அமைப்புகள் இருப்பது அவசியமாகும். அந்த வகையில், ஐ.நா. உருவாக்கப்பட்டபோது உலகில் 51 நாடுகளே இருந்தன. தற்போது, 200 நாடுகள் இருக்கின்றன. ஆனாலும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. அன்றைக்கு இருந்த அதே அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

இந்த உலகம் நிறையவே மாறி இருக்கிறது. அதற்கேற்ப புதிய யதார்த்தம், உலகளாவிய கட்டமைப்புகளில் பிரதிபலிக்க வேண்டும். அந்த வகையில், ஜி20 அமைப்பில் புதிதாக ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்த்திருக்கிறோம். அதேபோல, சர்வதேச அமைப்புகளிலும், பல நாடுகள் இணைந்திருக்கும் வளர்ச்சி வங்கிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் உடனடியாகவும், செயலாக்கமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

அதேபோல, எதிர்கால உலகுக்கு மிகப் பெரும் சவாலாகவும், பிரச்னையாகவும் இருக்கப் போவது, சைபர் பாதுகாப்பு மற்றும் ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயமும்தான். ஆகவே, இதை கட்டுப்படுத்த உலகளாவிய நடைமுறைகள் தேவை. இணைய உலகமானது பயங்கரவாதத்துக்கு நிதி சேர்ப்பதற்கான தளமாகவும் மாறி இருக்கிறது. எனவே, ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பும், வளர்ச்சியும் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு நாடும் பாதுகாப்பாக இருப்பது, அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பாக அமையும். இதுவே, ஒரே எதிர்காலம் என்பதை வலுவாக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, மனிதகுல நலனுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நம் கூட்டு திட்டங்கள் இல்லாமல், மனிதகுல நலன் அடிப்படையில் இருக்க வேண்டும். இதுவே ஒரே எதிர்காலத்துக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: insistPM ModiG20U.N.Change
ShareTweetSendShare
Previous Post

பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து பேசியது உண்மை: தேவகௌடா ஒப்புதல்!

Next Post

ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

Related News

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies