ஐ.நா.வில் சீர்திருத்தம் தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!
Sep 10, 2025, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா.வில் சீர்திருத்தம் தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

உண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலத்துக்கேற்ப நாம் மாறாவிட்டால் நமது இருப்பை இழந்துவிடுவோம். ஆகவே, உலகத்தின் உண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உட்பட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தாண்டு இந்தியா ஏற்றிருந்த நிலையில், மேற்கண்ட அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டின் மையப் பொருளாக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 3 அமர்வுகளாக நடந்த இந்த உச்சி மாநாட்டில், கடந்த 9-ம் தேதி ஒரே பூமி, ஒரே குடும்பம் என்கிற தலைப்புகளில் இரு அமர்வுகள் நடந்தன. நேற்று ஒரே எதிர்காலம் என்கிற தலைப்பில் அமர்வு நடந்தது.

இந்த அமர்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்த உலகை சிறந்த எதிர்காலத்துக்கு நாம் அழைத்துச் செல்ல வேண்டுமானால், தற்போதைய யதார்த்தங்களுக்கேற்ப உலக அமைப்புகள் இருப்பது அவசியமாகும். அந்த வகையில், ஐ.நா. உருவாக்கப்பட்டபோது உலகில் 51 நாடுகளே இருந்தன. தற்போது, 200 நாடுகள் இருக்கின்றன. ஆனாலும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. அன்றைக்கு இருந்த அதே அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

இந்த உலகம் நிறையவே மாறி இருக்கிறது. அதற்கேற்ப புதிய யதார்த்தம், உலகளாவிய கட்டமைப்புகளில் பிரதிபலிக்க வேண்டும். அந்த வகையில், ஜி20 அமைப்பில் புதிதாக ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்த்திருக்கிறோம். அதேபோல, சர்வதேச அமைப்புகளிலும், பல நாடுகள் இணைந்திருக்கும் வளர்ச்சி வங்கிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் உடனடியாகவும், செயலாக்கமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

அதேபோல, எதிர்கால உலகுக்கு மிகப் பெரும் சவாலாகவும், பிரச்னையாகவும் இருக்கப் போவது, சைபர் பாதுகாப்பு மற்றும் ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயமும்தான். ஆகவே, இதை கட்டுப்படுத்த உலகளாவிய நடைமுறைகள் தேவை. இணைய உலகமானது பயங்கரவாதத்துக்கு நிதி சேர்ப்பதற்கான தளமாகவும் மாறி இருக்கிறது. எனவே, ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பும், வளர்ச்சியும் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு நாடும் பாதுகாப்பாக இருப்பது, அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பாக அமையும். இதுவே, ஒரே எதிர்காலம் என்பதை வலுவாக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, மனிதகுல நலனுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நம் கூட்டு திட்டங்கள் இல்லாமல், மனிதகுல நலன் அடிப்படையில் இருக்க வேண்டும். இதுவே ஒரே எதிர்காலத்துக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: insistPM ModiG20U.N.Change
ShareTweetSendShare
Previous Post

பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து பேசியது உண்மை: தேவகௌடா ஒப்புதல்!

Next Post

ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies