ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
Jul 29, 2026, 11:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி இடையே வரும், 17 -ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக, இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. இது 46 கிலோ மீட்டர் பயணமாகும். இதில் மேட்டுப்பாளையம் கடல் மட்டத்தில் இருந்து 330 மீட்டர் மேலே அமைந்துள்ளது. ஆனால், ஊட்டி கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் மேலே அமைந்துள்ளது.

நமது பாரத தேசத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடமாக ஊட்டி திகழ்ந்து வருகிறது.

ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது, வெளி நாடுகளில் இருந்தும் கூட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள், மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்டம், ஊட்டி இடையே மலை இரயிலில் பயணம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், ஊட்டி மலை இரயிலில் இருக்கைகள் எப்போதும் காலியாக இருப்பதில்லை.

இந்த மலை இரயில் தனது பயணத்தின்போது 16 சுரங்கங்களையும், 250 பாலங்களையும், 208 வளைவுகளையும் கடந்து செல்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு கண்டுகளிக்கலாம்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் இடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை நாட்களில் சிறப்பு மலை இரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊட்டியில் இருந்து குன்னூருக்குச் செப்டம்பர் 16, 17, 30, அக்டோபர் 1 -ம் தேதி மலை இரயில் இயக்கப்பட உள்ளது. அதே போல் குன்னூரில் இருந்து ஊட்டிக்குச் செப்டம்பர் 17, 18, அக்டோபர் 1, 2 ஆகிய தேதியிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்குச் செப்டம்பர் 16, 30, அக்டோபர் 21, 23 ஆகிய தேதிகளிலும் மலை இரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: ooty train
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா.வில் சீர்திருத்தம் தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Next Post

ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!

Related News

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies