ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!

இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என வர்ணனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 11, 2023, 03:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெற்றியடைந்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டி இருக்கிறார். சந்தேகத்திற்கிடமின்றி இது இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜி20 அமைப்புக்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகித்திருந்தது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக ஜி20 அமைப்பின் பல்வேறு பிரவுகளின் சார்பில் 200 கூட்டங்கள் நடைபெற்று முடிந்தன. நிறைவாக, ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஐ.நா. அமைப்பின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான சசி தரூர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த சசி தரூர், “ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்கப்பட்டிருப்பது சந்திகத்திற்கிடமின்றி இந்தியாவுக்கு இராஜதந்திர வெற்றியாகும்.ஏனெனில், தலைவர்கள் டெல்லிக்கு வரும் வரை, கூட்டு அறிக்கைகூட இருக்குமா என்பதில் கணிசமான சந்தேகம் இருந்தது.

அதேபோல, உக்ரைனில் ரஷ்யப் போரைக் கண்டிக்க விரும்புபவர்களுக்கும், ரஷ்யா மற்றும் சீனாவை ஆதரிக்கும் நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியைக் குறைத்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாகத் தோன்றியது. ஆனால், அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமான செயல்பட்டு டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியது இராஜதந்திர வெற்றியாகும். இது இந்தியாவின் பெருமைக்கு மிகவும் முக்கியமானது மற்றும் வெற்றியாக வகைப்படுத்தலாம்” என்ற கூறியிருக்கிறார்.

Tags: PM ModiG20delhi declarationSasi TharoorPraised
Share
Tweet
SendShare
Previous Post

ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

Next Post

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம்: மலரஞ்சலி – மரியாதை செய்த அண்ணாமலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies