பதவி விலகு சேகர் பாபு: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பாஜகவினர் கைது
Jul 27, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பதவி விலகு சேகர் பாபு: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பாஜகவினர் கைது

Web Desk by Web Desk
Sep 12, 2023, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சட்ட விதிகளை மீறி மாநாட்டில் கலந்து கொண்டார். இதனால், சேகர் பாபு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு பேசினார். அவரது இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

பாஜகவின் கோரிக்கையை ஏற்று, 10-ம் தேதிக்குள் சேகர் பாபு, அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், இல்லையெனில், 11-ம் தேதி தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பு, பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை விதித்த கெடு, நேற்றோடு நிறைவு பெற்றது.

இந்த நிலையில், சென்னையில் அறநிலையத் துறை தலைமை அலுவலகம் முன்பு  மதியம் 3 மணி அளவில் பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதனிடையே, இந்து சயம அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் திருச்சியில் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சேகர் பாபுவையும் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி மற்றும் மாவட்டத் தலைவர் மோகனராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்களைக் கைது செய்தனர்.

இந்து சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவைக் கண்டித்தும் பதவி விலகக் கோரியும், இன்று ராணிப்பேட்டை, ராஜேஸ்வரி திரையரங்கம் அருகில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட தலைவர் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர்பாபு பதவிவிலகக்கோரி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கண்டன உரையாற்றிய தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மஹாலக்ஷ்மி திரளான தொண்டர்களுடன் கைதானார்.

இதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைதாகினர்.

Tags: bjpbjp protest
ShareTweetSendShare
Previous Post

பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறது திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

8 இடங்களில் 4 வது முறைாக E.D. சோதனை!-கதறும் செந்தில் பாலாஜி தரப்பு

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies