கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி 17-ம் தேதி புதிய திட்டம்!
Jun 6, 2025, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி 17-ம் தேதி புதிய திட்டம்!

'பி.எம். விஸ்வகர்மா' என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதி உதவி!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பி.எம். விஸ்வகர்மா” என்கிற பெயரில் கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 17-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ‘பி.எம். விஸ்வகர்மா’ என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை கிடைக்கும்.

இத்திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். இத்திட்டத்தின் முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். 2-வது தவணையாக 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 5 லட்சம் குடும்பங்களும், மொத்தமாக 5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரம், அளவு ஆகியவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 17-ம் தேதி ‘விஸ்வகர்மா தினத்தில்’ தொடங்கி வைக்கிறார். அன்றையதினம் நாடு முழுவதும் 70 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இத்திட்டத்தில் யார் யார் பயனடைய முடியும்? கொத்தனார், தச்சர், பொற்கொல்லர், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், இரும்புக் கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர், உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் நிதி பெற தகுதி உடையவர்களாவர்.

Tags: PM ModiPM Viswakarma schemeLaunchesseptember 17
ShareTweetSendShare
Previous Post

ரோட்டில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட ஆவணங்கள் !

Next Post

இந்திய நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது!

Related News

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

ஹஜ் புனித பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies