தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!
Mar 15, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்களில் அதிக மின்சாரம் கிடைக்கும் எனத் தெரிவித்து விட்டு, குறைந்த அளவு மின்சாரம் வழங்கினால், ஒரு யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்கப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை மத்திய அரசு மின்சாரம் வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக மின் தேவையை மத்திய அரசுக்குச் சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.

மேலும், தமிழக அரசின் மின் நிலையங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள், அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள், காற்றாலை நிறுவனங்கள், சூரியசக்தி மின்நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. ஆனாலும், தமிழக மின் வாரியம் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது.

மின் வாரியத்தின் கீழ் செயல்படும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தான், தற்போது தமிழகம் முழுவதும் அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும், அதைப் பூர்த்தி செய்யத் தேவையான மின் உற்பத்தி, மின் கொள்முதல் போன்ற பணிகள் செய்கிறது. இதனைச் சரி செய்ய, காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்க, தனியார் மின் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளன.

இந்த நிலையில், அடுத்த, 24 மணி நேரத்திற்கு ஒவ்வொரு, 15 நிமிடத்திற்கும் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதைக் கூற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

முன்கூட்டியே தெரிவித்த அளவை விட மின்சாரம் வழங்குவதில், 15 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், 1 யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்க, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, வரைவு அறிக்கையும் வெளியிட்டு, அக்டோபர் 10 -ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக மின் வாரியத்தின் இந்த திடீர் அறிவிப்புக்கு, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்கும் தனியார் மின் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Tags: tn eb
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் சாதி பிளவு மற்றும் வெறுப்புணர்வை உருவாக்க திமுக தான் முக்கிய காரணம்!- அண்ணாமலை

Next Post

காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies