தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!
Sep 10, 2025, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்களில் அதிக மின்சாரம் கிடைக்கும் எனத் தெரிவித்து விட்டு, குறைந்த அளவு மின்சாரம் வழங்கினால், ஒரு யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்கப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை மத்திய அரசு மின்சாரம் வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக மின் தேவையை மத்திய அரசுக்குச் சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.

மேலும், தமிழக அரசின் மின் நிலையங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள், அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள், காற்றாலை நிறுவனங்கள், சூரியசக்தி மின்நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. ஆனாலும், தமிழக மின் வாரியம் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது.

மின் வாரியத்தின் கீழ் செயல்படும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தான், தற்போது தமிழகம் முழுவதும் அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும், அதைப் பூர்த்தி செய்யத் தேவையான மின் உற்பத்தி, மின் கொள்முதல் போன்ற பணிகள் செய்கிறது. இதனைச் சரி செய்ய, காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்க, தனியார் மின் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளன.

இந்த நிலையில், அடுத்த, 24 மணி நேரத்திற்கு ஒவ்வொரு, 15 நிமிடத்திற்கும் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதைக் கூற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

முன்கூட்டியே தெரிவித்த அளவை விட மின்சாரம் வழங்குவதில், 15 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், 1 யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்க, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, வரைவு அறிக்கையும் வெளியிட்டு, அக்டோபர் 10 -ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக மின் வாரியத்தின் இந்த திடீர் அறிவிப்புக்கு, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்கும் தனியார் மின் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Tags: tn eb
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் சாதி பிளவு மற்றும் வெறுப்புணர்வை உருவாக்க திமுக தான் முக்கிய காரணம்!- அண்ணாமலை

Next Post

காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies