தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!
Jan 14, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்களில் அதிக மின்சாரம் கிடைக்கும் எனத் தெரிவித்து விட்டு, குறைந்த அளவு மின்சாரம் வழங்கினால், ஒரு யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்கப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை மத்திய அரசு மின்சாரம் வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக மின் தேவையை மத்திய அரசுக்குச் சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.

மேலும், தமிழக அரசின் மின் நிலையங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள், அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள், காற்றாலை நிறுவனங்கள், சூரியசக்தி மின்நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. ஆனாலும், தமிழக மின் வாரியம் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது.

மின் வாரியத்தின் கீழ் செயல்படும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தான், தற்போது தமிழகம் முழுவதும் அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும், அதைப் பூர்த்தி செய்யத் தேவையான மின் உற்பத்தி, மின் கொள்முதல் போன்ற பணிகள் செய்கிறது. இதனைச் சரி செய்ய, காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்க, தனியார் மின் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளன.

இந்த நிலையில், அடுத்த, 24 மணி நேரத்திற்கு ஒவ்வொரு, 15 நிமிடத்திற்கும் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதைக் கூற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

முன்கூட்டியே தெரிவித்த அளவை விட மின்சாரம் வழங்குவதில், 15 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், 1 யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்க, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, வரைவு அறிக்கையும் வெளியிட்டு, அக்டோபர் 10 -ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக மின் வாரியத்தின் இந்த திடீர் அறிவிப்புக்கு, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்கும் தனியார் மின் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Tags: tn eb
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் சாதி பிளவு மற்றும் வெறுப்புணர்வை உருவாக்க திமுக தான் முக்கிய காரணம்!- அண்ணாமலை

Next Post

காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies