தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!
Apr 29, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்களில் அதிக மின்சாரம் கிடைக்கும் எனத் தெரிவித்து விட்டு, குறைந்த அளவு மின்சாரம் வழங்கினால், ஒரு யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்கப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை மத்திய அரசு மின்சாரம் வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக மின் தேவையை மத்திய அரசுக்குச் சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.

மேலும், தமிழக அரசின் மின் நிலையங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள், அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள், காற்றாலை நிறுவனங்கள், சூரியசக்தி மின்நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. ஆனாலும், தமிழக மின் வாரியம் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது.

மின் வாரியத்தின் கீழ் செயல்படும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தான், தற்போது தமிழகம் முழுவதும் அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும், அதைப் பூர்த்தி செய்யத் தேவையான மின் உற்பத்தி, மின் கொள்முதல் போன்ற பணிகள் செய்கிறது. இதனைச் சரி செய்ய, காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்க, தனியார் மின் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளன.

இந்த நிலையில், அடுத்த, 24 மணி நேரத்திற்கு ஒவ்வொரு, 15 நிமிடத்திற்கும் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதைக் கூற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

முன்கூட்டியே தெரிவித்த அளவை விட மின்சாரம் வழங்குவதில், 15 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், 1 யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்க, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, வரைவு அறிக்கையும் வெளியிட்டு, அக்டோபர் 10 -ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக மின் வாரியத்தின் இந்த திடீர் அறிவிப்புக்கு, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி ஆகிய 2 வகை மின்சாரம் வழங்கும் தனியார் மின் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Tags: tn eb
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் சாதி பிளவு மற்றும் வெறுப்புணர்வை உருவாக்க திமுக தான் முக்கிய காரணம்!- அண்ணாமலை

Next Post

காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies