பிரதமர் மோடிக்கு மொராக்கோ தூதர் நன்றி!
Sep 10, 2025, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு மொராக்கோ தூதர் நன்றி!

நிலநடுக்க பாதிப்புக்கு நிதியுதவி வழங்க உறுதி!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோ நாட்டுக்கு, நிதியுதவி மற்றும் பொருளுதவி அளிக்க முன்வந்திருக்கும் இந்தியாவுக்கு, அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் மாலிகி நன்றி தெரிவித்திருக்கிறார்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு 11.11 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தில் மாரகேஷ் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன. இச்சம்பவத்தில் இதுவரை 2,800-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் நடந்த மறுநாள், இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது. இம்மாநாட்டு தொடங்குவதற்கு முன்பாகப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த சவாலான காலக்கட்டத்தில் மொராக்கோவுக்கு உலகளாவிய சமூகத்தின் அசைக்க முடியாத ஆதரவு உள்ளது. மேலும், மொராக்கோ நாட்டுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தகுதி வாய்ந்த அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டு, தேவைகளை மதிப்பீடு செய்து வருகின்றனர். உயிர்களைக் காப்பாற்றுவதும், பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எளிதில் அணுகக்கூடிய வகையில் சாலைகளைச் சீரமைப்பதும் மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இதுபோன்ற இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் திறன் மொராக்கோவுக்கு உள்ளது. இருப்பினும், சகோதர மற்றும் நட்பு நாடுகளின் உதவி எப்போது, ​​​​எங்கே தேவைப்படும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா போன்ற பல சகோதர மற்றும் நட்பு நாடுகள் மொராக்கோவுக்கு தங்களது உதவியை வழங்கத் தயாராக உள்ளன” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் உதவிக்கு மொராக்கோ தூதர் மாலிகி நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக, இந்தியாவுக்கான மொராக்கோவின் தூதர் முகமது மாலிகி கூறுகையில், “கடந்த 8-ம் தேதி எமது தாயகத்தைத் தாக்கிய பேரழிவுகரமான பூகம்பத்தைத் தொடர்ந்து, மொராக்கோவுக்கு தனது உதவியை வழங்க இந்தியா கருணையுடன் முன்மொழிந்தது. இந்த சைகை மிகவும் பாராட்டப்பட்டது. இது 2 நட்பு நாடுகளுக்கு இடையே மகிழ்ச்சியுடன் இருக்கும் நட்பு மற்றும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. இந்த இயற்கை பேரிடர் நாட்டை தாக்கிய முதல் மணி நேரத்திலிருந்து, குறிப்பாக இந்தியாவில் இருந்து காட்டப்படும் ஒற்றுமையின் வெளிப்பாட்டை மொராக்கோ உண்மையிலேயே பாராட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiMorroccoambassadorThanks
ShareTweetSendShare
Previous Post

4,000 தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

Next Post

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies