பிரதமர் மோடிக்கு மொராக்கோ தூதர் நன்றி!
Mar 15, 2026, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு மொராக்கோ தூதர் நன்றி!

நிலநடுக்க பாதிப்புக்கு நிதியுதவி வழங்க உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 13, 2023, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோ நாட்டுக்கு, நிதியுதவி மற்றும் பொருளுதவி அளிக்க முன்வந்திருக்கும் இந்தியாவுக்கு, அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் மாலிகி நன்றி தெரிவித்திருக்கிறார்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு 11.11 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தில் மாரகேஷ் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன. இச்சம்பவத்தில் இதுவரை 2,800-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் நடந்த மறுநாள், இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது. இம்மாநாட்டு தொடங்குவதற்கு முன்பாகப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த சவாலான காலக்கட்டத்தில் மொராக்கோவுக்கு உலகளாவிய சமூகத்தின் அசைக்க முடியாத ஆதரவு உள்ளது. மேலும், மொராக்கோ நாட்டுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தகுதி வாய்ந்த அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டு, தேவைகளை மதிப்பீடு செய்து வருகின்றனர். உயிர்களைக் காப்பாற்றுவதும், பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எளிதில் அணுகக்கூடிய வகையில் சாலைகளைச் சீரமைப்பதும் மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இதுபோன்ற இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் திறன் மொராக்கோவுக்கு உள்ளது. இருப்பினும், சகோதர மற்றும் நட்பு நாடுகளின் உதவி எப்போது, ​​​​எங்கே தேவைப்படும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா போன்ற பல சகோதர மற்றும் நட்பு நாடுகள் மொராக்கோவுக்கு தங்களது உதவியை வழங்கத் தயாராக உள்ளன” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் உதவிக்கு மொராக்கோ தூதர் மாலிகி நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக, இந்தியாவுக்கான மொராக்கோவின் தூதர் முகமது மாலிகி கூறுகையில், “கடந்த 8-ம் தேதி எமது தாயகத்தைத் தாக்கிய பேரழிவுகரமான பூகம்பத்தைத் தொடர்ந்து, மொராக்கோவுக்கு தனது உதவியை வழங்க இந்தியா கருணையுடன் முன்மொழிந்தது. இந்த சைகை மிகவும் பாராட்டப்பட்டது. இது 2 நட்பு நாடுகளுக்கு இடையே மகிழ்ச்சியுடன் இருக்கும் நட்பு மற்றும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. இந்த இயற்கை பேரிடர் நாட்டை தாக்கிய முதல் மணி நேரத்திலிருந்து, குறிப்பாக இந்தியாவில் இருந்து காட்டப்படும் ஒற்றுமையின் வெளிப்பாட்டை மொராக்கோ உண்மையிலேயே பாராட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiMorroccoambassadorThanks
ShareTweetSendShare
Previous Post

4,000 தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

Next Post

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies