வியட்நாமில் பயங்கர தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வியட்நாமில் பயங்கர தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!

அடுக்குமாடிக் குடியிருப்பில் நள்ளிரவில் அரங்கேறிய சோகம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 13, 2023, 08:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஏராளமானோர் தீக்காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இக்குடியிருப்பின் தரைத்தளத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இது மளமளவென 10 தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், கட்டடத்தில் தீயில் சிக்கித் தவித்த 70 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 50 பேர் சிகிச்சை பலனின்று உயிரிழந்து விட்டனர். எனினும், இக்கட்டடத்தில் 150-க்கும் மேற்பட்டோரு வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தீவிபத்து ஏற்பட்ட கட்டடம், மிகவும் குறுகிய தெருவில் அமைந்துள்ளது. இதனால், தீயணைப்பு வாகனங்கள் 300 முதல் 400 மீட்டருக்கு அப்பால் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தீயை விரைந்து அணைக்க முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேற்கண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து போன்ற அவசர காலங்களில் தப்பிப்பதற்கு அக்கட்டடத்தில் எவ்வித வசதிகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியட்நாமில் சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பல கொடிய தீவிபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டு ஹனோய் கரோக்கி மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர்  உயிரிழந்தனர்.  2018-ம் ஆண்டு ஹோ சின் மின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். ஓராண்டுக்கு முன்பு, ஹோ சி மின் நகரின் வர்த்தக மையத்தில் உள்ள 3 அடுக்கு கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: capitalhanoiapartment50 diedFire accidentvietnam
ShareTweetSendShare
Previous Post

கோஃல்ப் விளையாடி அசத்திய அண்ணாமலை!

Next Post

வீரமரணமடைந்த ராணுவ நாய் கென்ட் !

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies