வியட்நாமில் பயங்கர தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வியட்நாமில் பயங்கர தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!

அடுக்குமாடிக் குடியிருப்பில் நள்ளிரவில் அரங்கேறிய சோகம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 13, 2023, 08:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஏராளமானோர் தீக்காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இக்குடியிருப்பின் தரைத்தளத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இது மளமளவென 10 தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், கட்டடத்தில் தீயில் சிக்கித் தவித்த 70 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 50 பேர் சிகிச்சை பலனின்று உயிரிழந்து விட்டனர். எனினும், இக்கட்டடத்தில் 150-க்கும் மேற்பட்டோரு வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தீவிபத்து ஏற்பட்ட கட்டடம், மிகவும் குறுகிய தெருவில் அமைந்துள்ளது. இதனால், தீயணைப்பு வாகனங்கள் 300 முதல் 400 மீட்டருக்கு அப்பால் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தீயை விரைந்து அணைக்க முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேற்கண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து போன்ற அவசர காலங்களில் தப்பிப்பதற்கு அக்கட்டடத்தில் எவ்வித வசதிகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியட்நாமில் சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பல கொடிய தீவிபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டு ஹனோய் கரோக்கி மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர்  உயிரிழந்தனர்.  2018-ம் ஆண்டு ஹோ சின் மின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். ஓராண்டுக்கு முன்பு, ஹோ சி மின் நகரின் வர்த்தக மையத்தில் உள்ள 3 அடுக்கு கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Fire accidentvietnamcapitalhanoiapartment50 died
ShareTweetSendShare
Previous Post

கோஃல்ப் விளையாடி அசத்திய அண்ணாமலை!

Next Post

வீரமரணமடைந்த ராணுவ நாய் கென்ட் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies