ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீர மரணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 13, 2023, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திலுள்ள நர்ல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் மோப்ப நாயுடன் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படை வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். அதோடு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், 21-வது மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் உயிரிழந்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தன்னை வழிநடுத்துபவரை பாதுகாக்கும் வகையில், தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டை தன் மீது வாங்கிக் கொண்டு, தனது உயிரை மாய்த்துக் கொண்டது. தொடர்ந்து, பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

எனினும், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்குமான சண்டை தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவு நேர சீதோஷ்ண நிலை காரணமாக, தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும், இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2-வது தீவிரவாதியும் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த மிகப் பெரிய ஆயுதக் குவியல், பாகிஸ்தான் அடையாளங்களுடன் கூடிய மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags: encounterjammu kashmirSecurity Forces2 Terroristneutralized
ShareTweetSendShare
Previous Post

ரூ.7210 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

என் மண் என் மக்கள் யாத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு-நாராயணன் திருப்பதி!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies