ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
Sep 9, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீர மரணம்!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திலுள்ள நர்ல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் மோப்ப நாயுடன் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படை வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். அதோடு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், 21-வது மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் உயிரிழந்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தன்னை வழிநடுத்துபவரை பாதுகாக்கும் வகையில், தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டை தன் மீது வாங்கிக் கொண்டு, தனது உயிரை மாய்த்துக் கொண்டது. தொடர்ந்து, பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

எனினும், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்குமான சண்டை தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவு நேர சீதோஷ்ண நிலை காரணமாக, தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும், இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2-வது தீவிரவாதியும் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த மிகப் பெரிய ஆயுதக் குவியல், பாகிஸ்தான் அடையாளங்களுடன் கூடிய மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags: encounterjammu kashmirSecurity Forces2 Terroristneutralized
ShareTweetSendShare
Previous Post

ரூ.7210 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

என் மண் என் மக்கள் யாத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு-நாராயணன் திருப்பதி!

Related News

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies