ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
Jul 29, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீர மரணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 13, 2023, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திலுள்ள நர்ல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் மோப்ப நாயுடன் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படை வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். அதோடு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், 21-வது மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் உயிரிழந்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தன்னை வழிநடுத்துபவரை பாதுகாக்கும் வகையில், தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டை தன் மீது வாங்கிக் கொண்டு, தனது உயிரை மாய்த்துக் கொண்டது. தொடர்ந்து, பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

எனினும், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்குமான சண்டை தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவு நேர சீதோஷ்ண நிலை காரணமாக, தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும், இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2-வது தீவிரவாதியும் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த மிகப் பெரிய ஆயுதக் குவியல், பாகிஸ்தான் அடையாளங்களுடன் கூடிய மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags: encounterjammu kashmirSecurity Forces2 Terroristneutralized
ShareTweetSendShare
Previous Post

ரூ.7210 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

என் மண் என் மக்கள் யாத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு-நாராயணன் திருப்பதி!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies