பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த திடீர் முடிவு – என்ன காரணம்?
Oct 26, 2025, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த திடீர் முடிவு – என்ன காரணம்?

திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - தானே விசாரிப்பதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு.

Web Desk by Web Desk
Sep 14, 2023, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கைத் தானே விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

கடந்த 1996 -ம் ஆண்டு முதல் 2001 -ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2002 -ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பின்னர், வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த நிலையில், நான் பார்த்ததிலேயே மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்று கூறி இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தாமாக முன்வந்து எடுத்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மேலும், அமைச்சர் பொன்முடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டு உள்ளது என்றும், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.இதற்கிடையே அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து இன்று அறிவிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சற்று முன்னர், அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கைத் தானே விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.இதனால், இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. மேலும், இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பதாக அறிவித்துள்ளது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Justice Anand Venkateshdmk minister ponmudi
ShareTweetSendShare
Previous Post

இந்திய மாணவி கார் ஏற்றிக் கொலை: அலட்சிய காவல்துறை மீது அதிரடி நடவடிக்கை!

Next Post

பிறப்புச் சான்றிதழ்: மத்திய அரசின் புதிய சட்டம் –மக்கள் அமோக வரவேற்பு

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies