பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த திடீர் முடிவு – என்ன காரணம்?
Apr 29, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த திடீர் முடிவு – என்ன காரணம்?

திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - தானே விசாரிப்பதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கைத் தானே விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

கடந்த 1996 -ம் ஆண்டு முதல் 2001 -ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2002 -ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பின்னர், வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த நிலையில், நான் பார்த்ததிலேயே மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்று கூறி இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தாமாக முன்வந்து எடுத்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மேலும், அமைச்சர் பொன்முடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டு உள்ளது என்றும், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.இதற்கிடையே அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து இன்று அறிவிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சற்று முன்னர், அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கைத் தானே விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.இதனால், இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. மேலும், இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பதாக அறிவித்துள்ளது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Justice Anand Venkateshdmk minister ponmudi
ShareTweetSendShare
Previous Post

இந்திய மாணவி கார் ஏற்றிக் கொலை: அலட்சிய காவல்துறை மீது அதிரடி நடவடிக்கை!

Next Post

பிறப்புச் சான்றிதழ்: மத்திய அரசின் புதிய சட்டம் –மக்கள் அமோக வரவேற்பு

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies