பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த திடீர் முடிவு – என்ன காரணம்?
Jul 28, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த திடீர் முடிவு – என்ன காரணம்?

திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - தானே விசாரிப்பதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கைத் தானே விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

கடந்த 1996 -ம் ஆண்டு முதல் 2001 -ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2002 -ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பின்னர், வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த நிலையில், நான் பார்த்ததிலேயே மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்று கூறி இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தாமாக முன்வந்து எடுத்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மேலும், அமைச்சர் பொன்முடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டு உள்ளது என்றும், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.இதற்கிடையே அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து இன்று அறிவிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சற்று முன்னர், அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கைத் தானே விசாரிப்பதாகச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.இதனால், இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. மேலும், இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பதாக அறிவித்துள்ளது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Justice Anand Venkateshdmk minister ponmudi
ShareTweetSendShare
Previous Post

இந்திய மாணவி கார் ஏற்றிக் கொலை: அலட்சிய காவல்துறை மீது அதிரடி நடவடிக்கை!

Next Post

பிறப்புச் சான்றிதழ்: மத்திய அரசின் புதிய சட்டம் –மக்கள் அமோக வரவேற்பு

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies