பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய போது மிகவும் பதட்டமாக இருந்ததாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
பல நாட்களாக காயத்தால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கே.எல்.ராகுல், சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் 111 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்ததாக இலங்கைக்கு எதிரானப் போட்டியிலும் களமிறங்கிய ராகுல் 39 ரன்களை எடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ” பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய போது மிகவும் பதட்டமாக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடியதால் எப்படி விளையாட போகிறேன் என்ற பதட்டம் இருந்தது, பின்பு பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் எனது செயல்பாடுகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.