திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு
Jan 14, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது என விஹெச்பி குற்றம் சாட்டியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், கோட்டப் பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் ஏழுமலை, உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை, அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு, உள்ளூர் மக்கள், வெளியூர் பக்தர்கள் என தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பௌர்ணமி உள்ளிட்ட விழாக்காலங்களில் பல லட்சம் பேர் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருகை தரும், வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், பக்தர்களுக்ளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை முறையாக செய்து தர வேண்டும். ஆனால், அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

எனவே, பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும்.

மேலும், இறந்த யானைக்கு ரூ.49 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டுகிறார்கள். இந்த பணத்தில், பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

மேலும், மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. இது, பக்தர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு, ஏற்கனவே, திருக்கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.

எங்கள் கோரிக்கைகள் அனைத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags: VHPtiruvannamalai templeagamam
ShareTweetSendShare
Previous Post

ஐபோன் 12க்கு தடை விதித்த பிரான்ஸ் !

Next Post

சோம்பேறி குடிமகன் போட்டி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies