திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது என விஹெச்பி குற்றம் சாட்டியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், கோட்டப் பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் ஏழுமலை, உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை, அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு, உள்ளூர் மக்கள், வெளியூர் பக்தர்கள் என தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பௌர்ணமி உள்ளிட்ட விழாக்காலங்களில் பல லட்சம் பேர் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருகை தரும், வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், பக்தர்களுக்ளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை முறையாக செய்து தர வேண்டும். ஆனால், அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

எனவே, பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும்.

மேலும், இறந்த யானைக்கு ரூ.49 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டுகிறார்கள். இந்த பணத்தில், பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

மேலும், மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. இது, பக்தர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு, ஏற்கனவே, திருக்கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.

எங்கள் கோரிக்கைகள் அனைத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags: VHPtiruvannamalai templeagamam
ShareTweetSendShare
Previous Post

ஐபோன் 12க்கு தடை விதித்த பிரான்ஸ் !

Next Post

சோம்பேறி குடிமகன் போட்டி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies