திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு
Jul 25, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Sep 15, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது என விஹெச்பி குற்றம் சாட்டியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், கோட்டப் பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் ஏழுமலை, உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை, அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு, உள்ளூர் மக்கள், வெளியூர் பக்தர்கள் என தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பௌர்ணமி உள்ளிட்ட விழாக்காலங்களில் பல லட்சம் பேர் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருகை தரும், வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், பக்தர்களுக்ளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை முறையாக செய்து தர வேண்டும். ஆனால், அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

எனவே, பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும்.

மேலும், இறந்த யானைக்கு ரூ.49 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டுகிறார்கள். இந்த பணத்தில், பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

மேலும், மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. இது, பக்தர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு, ஏற்கனவே, திருக்கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.

எங்கள் கோரிக்கைகள் அனைத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags: VHPtiruvannamalai templeagamam
ShareTweetSendShare
Previous Post

ஐபோன் 12க்கு தடை விதித்த பிரான்ஸ் !

Next Post

சோம்பேறி குடிமகன் போட்டி!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies