திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு
Apr 29, 2026, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது என விஹெச்பி குற்றம் சாட்டியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், கோட்டப் பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் ஏழுமலை, உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை, அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு, உள்ளூர் மக்கள், வெளியூர் பக்தர்கள் என தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பௌர்ணமி உள்ளிட்ட விழாக்காலங்களில் பல லட்சம் பேர் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருகை தரும், வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், பக்தர்களுக்ளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை முறையாக செய்து தர வேண்டும். ஆனால், அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

எனவே, பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும்.

மேலும், இறந்த யானைக்கு ரூ.49 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டுகிறார்கள். இந்த பணத்தில், பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

மேலும், மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. இது, பக்தர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு, ஏற்கனவே, திருக்கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.

எங்கள் கோரிக்கைகள் அனைத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags: VHPtiruvannamalai templeagamam
ShareTweetSendShare
Previous Post

ஐபோன் 12க்கு தடை விதித்த பிரான்ஸ் !

Next Post

சோம்பேறி குடிமகன் போட்டி!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies