ஒரே நாள், ஒரே விமானம்: சிக்கிய 113 கடத்தல் பேர்வழிகள் – சென்னையில் பரபரப்பு
Sep 6, 2025, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாள், ஒரே விமானம்: சிக்கிய 113 கடத்தல் பேர்வழிகள் – சென்னையில் பரபரப்பு

Web Desk by Web Desk
Sep 15, 2023, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்குச் செப்டம்பர் 14 -ம் தேதி காலை 8 மணிக்கு ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது.

அதில், பயணம் செய்த பயணிகள் சிலர் கடத்தல் பொருட்களைக் கொண்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனால், உஷாரான அதிகாரிகள், விமானத்தில் வந்த 186 பயணிகளிடம் தனித்தனியாக விசாரணை மற்றும் தீவிர சோதனை நடத்தினர்.

இதில், 113 பயணிகள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
13 கிலோ தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட், தங்கக் கம்பி உள்ளிட்டவைகளும், சூட்கேஸ் மூலம் 120 ஐ – போன்களும், 84 ஆண்ட்ராய்டு போன்களும், ஆக மொத்தம் 204 போன்கள் கடத்திக் கொண்டு வந்துள்ளனர்.

அதேபோல, வெளிநாட்டு லேப்டாப்கள், குங்குமப்பூக்கள் ஆகியவற்றை மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.14 கோடி ஆகும்.

இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட 113 பேர் மீதும் சுங்க சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், கைது செய்யப்படவில்லை.

காரணம், கடத்தலில் ஈடுபடும் நபர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடத்தலில் ஈடுபட்டால் மட்டுமே அவரை சுங்க சட்டப்படி கைது செய்ய முடியும். அதற்குக் குறைவான தொகையில் கடத்தினால், கைது செய்ய முடியாது. வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். இதனால், அவர்கள் 113 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Tags: chennai airportairport customs
ShareTweetSendShare
Previous Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ராஜ் சுப்பிரமணியம்.

Next Post

ராம ராஜ்ஜியம் அமைப்போம்: அனுராக் தாக்கூர் உறுதி!

Related News

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies