உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்: பிரதமர் மோடி முதலிடம்!
Jan 14, 2026, 10:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்: பிரதமர் மோடி முதலிடம்!

அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் ஆய்வில் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகிப்பது, அமெரிக்காவின் மார்னிங் கல்சன்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்கிற நிறுவனம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு உள்ள செல்வாக்கு குறித்து  ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இதில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகில் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் தலைமையை ஏற்பதாக 76 சதவிகிதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள். 18 சதவிகிதம் பேர் எதிர்ப்பதாகவும், 6 சதவிகிதம் பேர் கருத்துக் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்விலும் பிரதமர் மோடிதான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் 2-வது இடத்தில் சுவிட்சர்லாந்து பிரதமர் அலைன் பெர்செட் இருக்கிறார். இவருக்கு 64 சதவிகித மக்களின் ஆதரவு இருக்கிறது. அதேபோல, மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 61 சதவிகித மக்கள் ஆதரவுடன் 3 இடத்தில் இருக்கிறார். அதேசமயம், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 40 சதவிகித மக்களின் ஆதரவும், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 37 சதவிகித மக்களின் ஆதரவும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு 27 சதவிகித மக்களின் ஆதரவும் மட்டுமே கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பா.ஜ.க. தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜி20 உச்சி மாநாட்டுக்குப் பின் உலகில் அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில், “சர்வதேச அளவில் நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் இணையற்ற அடையாளமாக பிரதமர் மோடி திகழ்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: globalapprovalPM Modihighest
ShareTweetSendShare
Previous Post

ராம ராஜ்ஜியம் அமைப்போம்: அனுராக் தாக்கூர் உறுதி!

Next Post

“யஷோபூமி” : நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies