உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்: பிரதமர் மோடி முதலிடம்!
Jul 27, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்: பிரதமர் மோடி முதலிடம்!

அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் ஆய்வில் தகவல்!

Web Desk by Web Desk
Sep 16, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகிப்பது, அமெரிக்காவின் மார்னிங் கல்சன்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்கிற நிறுவனம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு உள்ள செல்வாக்கு குறித்து  ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இதில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகில் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் தலைமையை ஏற்பதாக 76 சதவிகிதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள். 18 சதவிகிதம் பேர் எதிர்ப்பதாகவும், 6 சதவிகிதம் பேர் கருத்துக் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்விலும் பிரதமர் மோடிதான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் 2-வது இடத்தில் சுவிட்சர்லாந்து பிரதமர் அலைன் பெர்செட் இருக்கிறார். இவருக்கு 64 சதவிகித மக்களின் ஆதரவு இருக்கிறது. அதேபோல, மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 61 சதவிகித மக்கள் ஆதரவுடன் 3 இடத்தில் இருக்கிறார். அதேசமயம், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 40 சதவிகித மக்களின் ஆதரவும், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 37 சதவிகித மக்களின் ஆதரவும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு 27 சதவிகித மக்களின் ஆதரவும் மட்டுமே கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பா.ஜ.க. தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜி20 உச்சி மாநாட்டுக்குப் பின் உலகில் அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில், “சர்வதேச அளவில் நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் இணையற்ற அடையாளமாக பிரதமர் மோடி திகழ்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: globalapprovalPM Modihighest
ShareTweetSendShare
Previous Post

ராம ராஜ்ஜியம் அமைப்போம்: அனுராக் தாக்கூர் உறுதி!

Next Post

“யஷோபூமி” : நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி !

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies