வஞ்சித்துவிட்டார் அமைச்சர் சக்ரபாணி - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
Jan 14, 2026, 04:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வஞ்சித்துவிட்டார் அமைச்சர் சக்ரபாணி – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 16, 2023, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களை வஞ்சித்துவிட்டார் அமைச்சர் சக்கரபாணி. இதற்கு மேலும் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் 2-ம் கட்ட யாத்திரையை கடந்த 4-ம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடங்கினார். இந்த நிலையில், 15-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகரில் யாத்திரை நடைபெற்றது.பாரதப் பிரதமர் மோடி மீது பேரன்பு கொண்ட பொதுமக்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமலை சின்னப்ப நாயக்கர் வழிவந்த 19 -ஆவது பாளையக்காரர், விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலிலிருந்து ஒரு கூட்டமைப்பைத் திரட்டி ராணி வேலுநாச்சியாருக்கும், ஊமைத்துரைக்கும் போரில் காலத்தில் உதவி செய்து, பாஞ்சாலங்குறிச்சி சிறைக்குள்ளே பூட்டி வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையை, சிறைக்குள்ளே புகுந்து அதிரடிப் போர் நடத்தி மீட்ட மாவீரர்.

பணத்திற்கு ஆசைப்பட்ட சில துரோகிகளால், கோபால் நாயக்கர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப் பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட இடம் அவரது பெயரால் இன்று கோபால் சமுத்திரம் என்று அழைக்கப்படும் குளக்கரை. சாகும் போது கூட, கொஞ்சமும் கலங்காமல் தன் மரணத்தைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட மாவீரனாக திகழ்ந்தார், கோபால் நாயக்கர். அத்தகைய மாவீரர்கள் வாழ்ந்த மண்.

ஆசியாவின் மிகப் பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாகவும், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் அடிப்படையில், தமிழ்நாட்டிலேயே பெரிய காய்கறிச் சந்தையாகவும் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறிச் சந்தை விளங்குகிறது. கேரளா மாநிலத்தின் 60% காய்கறிகளின் தேவையை, ஒட்டன்சத்திரம் சந்தைதான் நிறைவேற்றுகிறது.

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ் என பல காய்கறிகள் இந்த சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்படுகின்றன. வாதம், மூட்டுவலிதொழுநோய், வயிற்று உபாதைகள் மற்றும் பாம்புகடி போன்றவற்றிலிருந்து விடுபடச் மிகச்சிறந்த மருந்தான கண்வலிக் கிழங்கு, இந்தப் பகுதியில் அதிகம் பயிரிடப்படுகிறது.

தயிர், வெண்ணை விற்க மட்டுமே 600 கடைகள் இருக்கின்றன. ஒட்டன்சத்திரம் சந்தையில், ஒரு நாளைக்கு 20 கோடி ரூபாய் வியாபாரமாகிறது. ஆனால், இந்தச் சந்தைக்குத் தேவைப்படும் குளிர்பதன வசதியை, இதுவரை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை இந்தத் தொகுதி அமைச்சர். ஒட்டன்சத்திரம் கால்நடைச் சந்தையில், ஞாயிறு தோறும் 2,000 பசுமாடுகள் விற்பனையாகும் அளவுக்குப் புகழ்பெற்றது.

மத்திய அரசு, பழநி – ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு, ரூ.172 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று திண்டுக்கல்லுக்கு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த 1159 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது நமது மத்திய அரசு. 242 கோடி ரூபாய் செலவில் திண்டுக்கல் பழனி பாலக்காடு ரயில் மின்சாரமயக்குதல் பணிகள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு இந்த வருடம் ஏப்ரல் மாதம் நமது பாரத பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் 2050 -ம் ஆண்டுக்குள் ரயில்தடம் மின்சார மயமாக்குவோம் என்று சொல்கிறார்கள். இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 37,011 ரயில் கிலோமீட்டர் மின்சாரமயமாக்கி சாதனை படைத்துள்ளார் நமது பாரத பிரதமர். ஒட்டுமொத்த ரயில் தடங்களில் 90 சதவீதம் மின்சார மயமாக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்குவதாகக் கூறி, கையொப்பம் வாங்கிவிட்டு, வேலை வழங்காமல் ஏமாற்றியிருக்கிறது திமுக. நலத்திட்டங்கள் எதுவும் செய்யாமல் புறக்கணித்திருக்கிறது திமுக. மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழகத்தில் மூட்டைகளில் சேகரித்து வைத்து இருந்த நெல்மணிகள் முளைத்து இருந்தது. விவசாயிகள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து, அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை இந்த அரசு பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும், கான்கிரீட் வீடு கட்ட நாலு லட்சம் தருவேன் என்று சொன்னார் அமைச்சர் சக்கரபாணி. சந்தைக்கு குளிர்சாதன கிடங்கு, வீடில்லாத அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வீடுகள், நீண்டநாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், வேலைவாய்ப்புகளை மேம்படுத்த தொழிற்பேட்டை என ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பணி வழங்குவதாகக் கூறி, கையொப்பம் வாங்கிவிட்டு, வேலை வழங்காமல் ஏமாற்றியிருக்கிறது திமுக. நலத்திட்டங்கள் எதுவும் செய்யாமல் புறக்கணித்திருக்கிறது திமுக.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழகத்தில் மூட்டைகளில் சேகரித்து வைத்து இருந்த நெல்மணிகள் முளைத்து இருந்தது. விவசாயிகள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து, அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை இந்த அரசு பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், கான்கிரீட் வீடு கட்ட நாலு லட்சம் தருவேன் என்று சொன்னார் அமைச்சர் சக்கரபாணி. சந்தைக்கு குளிர்சாதன கிடங்கு, வீடில்லாத அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வீடுகள், நீண்டநாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், வேலைவாய்ப்புகளை மேம்படுத்த தொழிற்பேட்டை என ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

காப்பிலயப்பட்டி ஊராட்சியில் விவசாய நிலங்கள் மத்தியில், 18 ஏக்கர் அளவில் கழிவுப் பொருள்கள் மேலாண்மை என்ற பெயரில், 25 டன் அளவுக்கு மருத்துவக் கழிவு முதலானவை குவித்து வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது இந்தக் கழிவுகளையும் எரித்து, சுற்றுச் சூழலைப் பாதிப்படையச் செய்கிறார்கள். சுற்றியிருக்கும் விவசாய நிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கண்வலிக் கிழங்கு விதைக் கொள்முதலிலும், அமைச்சர் சக்கரபாணி தலையீடு இருப்பதால், விவசாயிகளுக்கு 50% விலையே கிடைக்கிறது என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் என்ற பெயரில், மின்சாரக்கட்டணம், பால் பொருள்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என அனைத்தையும் உயர்த்திவிட்டார்கள். அனைவருக்கும் கட்டணத்தை உயர்த்தி விட்டு, உரிமைத் தொகை மட்டும் தகுதியுள்ள மகளிருக்காம். ஏன் இந்த ஏமாற்று வேலை? 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்துவரும் மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி. இதற்கு மேலும் மக்கள் உங்களை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

Tags: annamalai bjpbjp tamilnadu
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Next Post

அண்ணாதுரை குடும்பத்தையே மறைத்து விட்டார்கள் – திமுக தலைவர்கள் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies