"பி.எம்.விஸ்வகர்மா" திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Oct 10, 2025, 01:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பி.எம்.விஸ்வகர்மா” திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்!

Web Desk by Web Desk
Sep 17, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பி.எம். விஸ்வகர்மா” என்கிற பெயரில் கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் குடும்பங்கள் என 5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ‘பி.எம். விஸ்வகர்மா’ என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இத்திட்டம் 2023-2024 நிதியாண்டு முதல் 2027-2028 நிதியாண்டு வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். இத்திட்டத்தின் முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. 2-வது தவணையாக 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 5 லட்சம் குடும்பங்களும், மொத்தமாக 5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும். இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா ஜெயந்தியான இன்று தொடங்கி வைத்தார். மேலும், நாடு முழுவதும் 70 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ் கொத்தனார், தச்சர், பொற்கொல்லர், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், இரும்புக் கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர் உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் நிதி பெற தகுதி உடையவர்களாவர்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!

Next Post

பிரதமர் மோடி விஸ்வகர்மா தின வாழ்த்து!

Related News

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies