"பி.எம்.விஸ்வகர்மா" திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பி.எம்.விஸ்வகர்மா” திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பி.எம். விஸ்வகர்மா” என்கிற பெயரில் கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் குடும்பங்கள் என 5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ‘பி.எம். விஸ்வகர்மா’ என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இத்திட்டம் 2023-2024 நிதியாண்டு முதல் 2027-2028 நிதியாண்டு வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். இத்திட்டத்தின் முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. 2-வது தவணையாக 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 5 லட்சம் குடும்பங்களும், மொத்தமாக 5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும். இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா ஜெயந்தியான இன்று தொடங்கி வைத்தார். மேலும், நாடு முழுவதும் 70 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ் கொத்தனார், தச்சர், பொற்கொல்லர், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், இரும்புக் கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர் உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் நிதி பெற தகுதி உடையவர்களாவர்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!

Next Post

பிரதமர் மோடி விஸ்வகர்மா தின வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies