இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!
Jun 15, 2026, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!

அமெரிக்காவில் ரோந்து வாகனம் மோதியது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் காவல்துறையினரின் ரோந்து வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியில் இருந்து நீக்க வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பி இருக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்வி கண்டூலா. இவர், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகரில், முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த சூழலில், சமீபத்தில் மாணவி ஜான்வி சாலையைக் கடக்க முயன்றபோது, அதிகவேகமாக வந்த காவல்துறை ரோந்து வாகனம் மோதியது. இதில், சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கண்டூலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேற்கண்ட காவல்துறை வாகனத்தை, கெவின் டேவ் என்ற அதிகாரி ஓட்ட, டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு காவல்துறை அதிகாரியும் உடனிருந்தார். மேற்கண்ட வாகனம் 120 கி.மீட்டர் வேகத்தில் வந்த நிலையில், விபத்துக்கு பிறகு சியாட்டில் காவல்துறை சங்கத் தலைவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அதிகாரி டேனியல், வாகனம் 80 கி.மீ. வேகத்தில் மட்டுமே வந்ததாகக் கூறியதோடு, மாணவி குறித்து கேலியாக பேசி சிரித்தார்.

இந்த உரையாடல், காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரெரின் உடையில் இருந்த கேமராவில் பதிவானது. இந்த ஒளிப்பதிவு சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கும் காரணமானதோடு, கேலி பேசி சிரித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, மேற்கண்ட விபத்து குறித்து சியாட்டில் நகர காவல்துறை அதிகாரிகள் சங்கத்துக்கு விளக்கமளித்துள்ள டேனியல் ஆடரெர், “நகைச்சுவையாக தனிப்பட்ட முறையில் பேசிய விவகாரம், கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என்று நம்பினேன். என் கடமைக்கும், நான் பேசியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் சங்கம் அளித்திருக்கும் விளக்கத்தில், “விபத்து நடந்தபோது பேசிய உரையாடலின் ஒருபகுதி மட்டுமே வெளியாகி இருக்கிறது. மாணவிக்கு உதவும் வகையில் டேனியல் ஆடரெர் கூறிய கருத்துக்கள் எதுவும் அந்த ஒலிப்பதிவில் வெளியிடப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், மாணவி குறித்து கேலி பேசிய டேனியல் ஆடரெரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உட்பட 6,700 பேர் மனு ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இந்த மனு, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

Tags: 700 writamericaaccidentIndian studentpolice car6
ShareTweetSendShare
Previous Post

அசைக்க முடியாத தேசபக்திக்குச் சான்று: அமித்ஷா!

Next Post

“பி.எம்.விஸ்வகர்மா” திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies