இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!
Aug 24, 2025, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மாணவி உயிரிழப்பு: காவல் அதிகாரியை நீக்கக் கோரி 6,700 பேர் மனு!

அமெரிக்காவில் ரோந்து வாகனம் மோதியது!

Web Desk by Web Desk
Sep 17, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் காவல்துறையினரின் ரோந்து வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியில் இருந்து நீக்க வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பி இருக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்வி கண்டூலா. இவர், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகரில், முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த சூழலில், சமீபத்தில் மாணவி ஜான்வி சாலையைக் கடக்க முயன்றபோது, அதிகவேகமாக வந்த காவல்துறை ரோந்து வாகனம் மோதியது. இதில், சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கண்டூலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேற்கண்ட காவல்துறை வாகனத்தை, கெவின் டேவ் என்ற அதிகாரி ஓட்ட, டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு காவல்துறை அதிகாரியும் உடனிருந்தார். மேற்கண்ட வாகனம் 120 கி.மீட்டர் வேகத்தில் வந்த நிலையில், விபத்துக்கு பிறகு சியாட்டில் காவல்துறை சங்கத் தலைவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அதிகாரி டேனியல், வாகனம் 80 கி.மீ. வேகத்தில் மட்டுமே வந்ததாகக் கூறியதோடு, மாணவி குறித்து கேலியாக பேசி சிரித்தார்.

இந்த உரையாடல், காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரெரின் உடையில் இருந்த கேமராவில் பதிவானது. இந்த ஒளிப்பதிவு சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கும் காரணமானதோடு, கேலி பேசி சிரித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, மேற்கண்ட விபத்து குறித்து சியாட்டில் நகர காவல்துறை அதிகாரிகள் சங்கத்துக்கு விளக்கமளித்துள்ள டேனியல் ஆடரெர், “நகைச்சுவையாக தனிப்பட்ட முறையில் பேசிய விவகாரம், கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என்று நம்பினேன். என் கடமைக்கும், நான் பேசியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் சங்கம் அளித்திருக்கும் விளக்கத்தில், “விபத்து நடந்தபோது பேசிய உரையாடலின் ஒருபகுதி மட்டுமே வெளியாகி இருக்கிறது. மாணவிக்கு உதவும் வகையில் டேனியல் ஆடரெர் கூறிய கருத்துக்கள் எதுவும் அந்த ஒலிப்பதிவில் வெளியிடப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், மாணவி குறித்து கேலி பேசிய டேனியல் ஆடரெரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உட்பட 6,700 பேர் மனு ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இந்த மனு, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

Tags: 700 writamericaaccidentIndian studentpolice car6
ShareTweetSendShare
Previous Post

அசைக்க முடியாத தேசபக்திக்குச் சான்று: அமித்ஷா!

Next Post

“பி.எம்.விஸ்வகர்மா” திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies