ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!
Jan 14, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!

சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல்துறை தீவிரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் 1990 வரை தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. 1990 ஜனவரி மாதம் 19-ம் தேதி ஒரே நாள் இரவில் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்த இந்து பண்டிட் சமூகத்தினர் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதோடு, மாநிலத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். இதன் பிறகு, அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் தப்பியோடினர்.

இவ்வாறு தப்பியோடிய 4,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை மத்திய அரசு அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 13 தீவிரவாதிகளின் மீதான பிரகடன நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

இதுகுறித்து கிஷ்த்வார் மாவட்டத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.) கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் காவல்துறை உத்தரவின்படி, கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை, சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலைமறைவாக இருக்கும் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) பிரிவு 82-ன் கீழ் பிரகடன நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறது.

கிஷ்த்வார் காவல்துறை சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டிருக்கிறது. ஆகவே, தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் இத்தீவிரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு, அத்தீவிரவாதிகளை சட்டத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும அவசியமாகும். ஆகவே, மேற்கண்ட தீவிரவாதிகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags: policejammu kashmirterroristaction
ShareTweetSendShare
Previous Post

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் புதிய மேல்சாந்தி !

Next Post

விஸ்வகர்மா திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை- அண்ணாமலை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies