ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!
Mar 15, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!

சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல்துறை தீவிரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் 1990 வரை தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. 1990 ஜனவரி மாதம் 19-ம் தேதி ஒரே நாள் இரவில் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்த இந்து பண்டிட் சமூகத்தினர் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதோடு, மாநிலத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். இதன் பிறகு, அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் தப்பியோடினர்.

இவ்வாறு தப்பியோடிய 4,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை மத்திய அரசு அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 13 தீவிரவாதிகளின் மீதான பிரகடன நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

இதுகுறித்து கிஷ்த்வார் மாவட்டத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.) கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் காவல்துறை உத்தரவின்படி, கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை, சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலைமறைவாக இருக்கும் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) பிரிவு 82-ன் கீழ் பிரகடன நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறது.

கிஷ்த்வார் காவல்துறை சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டிருக்கிறது. ஆகவே, தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் இத்தீவிரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு, அத்தீவிரவாதிகளை சட்டத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும அவசியமாகும். ஆகவே, மேற்கண்ட தீவிரவாதிகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags: policejammu kashmirterroristaction
ShareTweetSendShare
Previous Post

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் புதிய மேல்சாந்தி !

Next Post

விஸ்வகர்மா திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை- அண்ணாமலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies