ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!
Jul 24, 2025, 07:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!

சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல்துறை தீவிரம்!

Web Desk by Web Desk
Sep 17, 2023, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் 1990 வரை தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. 1990 ஜனவரி மாதம் 19-ம் தேதி ஒரே நாள் இரவில் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்த இந்து பண்டிட் சமூகத்தினர் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதோடு, மாநிலத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். இதன் பிறகு, அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் தப்பியோடினர்.

இவ்வாறு தப்பியோடிய 4,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை மத்திய அரசு அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 13 தீவிரவாதிகளின் மீதான பிரகடன நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

இதுகுறித்து கிஷ்த்வார் மாவட்டத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.) கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் காவல்துறை உத்தரவின்படி, கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை, சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலைமறைவாக இருக்கும் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) பிரிவு 82-ன் கீழ் பிரகடன நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறது.

கிஷ்த்வார் காவல்துறை சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டிருக்கிறது. ஆகவே, தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் இத்தீவிரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு, அத்தீவிரவாதிகளை சட்டத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும அவசியமாகும். ஆகவே, மேற்கண்ட தீவிரவாதிகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags: policejammu kashmirterroristaction
ShareTweetSendShare
Previous Post

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் புதிய மேல்சாந்தி !

Next Post

விஸ்வகர்மா திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை- அண்ணாமலை!

Related News

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies