ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!
Jul 29, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!

சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல்துறை தீவிரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் 1990 வரை தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. 1990 ஜனவரி மாதம் 19-ம் தேதி ஒரே நாள் இரவில் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்த இந்து பண்டிட் சமூகத்தினர் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதோடு, மாநிலத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். இதன் பிறகு, அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் தப்பியோடினர்.

இவ்வாறு தப்பியோடிய 4,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை மத்திய அரசு அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 13 தீவிரவாதிகளின் மீதான பிரகடன நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

இதுகுறித்து கிஷ்த்வார் மாவட்டத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.) கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் காவல்துறை உத்தரவின்படி, கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை, சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலைமறைவாக இருக்கும் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) பிரிவு 82-ன் கீழ் பிரகடன நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறது.

கிஷ்த்வார் காவல்துறை சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டிருக்கிறது. ஆகவே, தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் இத்தீவிரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு, அத்தீவிரவாதிகளை சட்டத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும அவசியமாகும். ஆகவே, மேற்கண்ட தீவிரவாதிகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags: policejammu kashmirterroristaction
ShareTweetSendShare
Previous Post

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் புதிய மேல்சாந்தி !

Next Post

விஸ்வகர்மா திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை- அண்ணாமலை!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies