திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை எச்சரிக்கும் வகையில், திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
திமுக எம்பி டிஆர் பாலு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது திமுகவின் மிகப் பெரிய கூட்டம் போல் தெரிகிறது. ஒரு அரங்கத்தில் நடைபெறுவது போல் உள்ளது. இந்த கூட்டத்தில் பல நூறு பேர் அமர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய டி.ஆர்.பாலு, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். அதை அவரே அவரது வாயால் சொல்கிறார்.
அந்த வீடியோவில் டி.ஆர்.பாலு பேசியுள்ளதாவது, இளைஞரணி தலைவரைப் பார்த்துப் பயந்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்று. அவர் அவரது அப்பாவை பார்த்தால் மட்டும் தான் பயப்படுகிறார். வேறு யாரைப்பார்த்தாலும் பயப்படுவது கிடையாது. அவர் பாட்டுக்கும் என்ன வேண்ணாலும் பேசுகிறார்.
என்ன வேண்ணாலும் பேசலாம். பேசிட்டு அதைச் சமாளிக்கலாம் என்று நினைக்கிறார். அதனால், அப்படிப் பேசுகிறார். ஆனால், தன்னுடைய கையிலே வைத்துள்ள பொருள் கீழே விழுந்து உடைந்துவிடக்கூடாதுன்னு என்ற நல்ல எண்ணத்தையும் மனதில் வைத்துக் கொண்டு அவர் மிகச்சிறப்பாக பணியாற்றுவது அவரது கடமை என்பதையும் நான் எச்சரிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை சொல்லும் அளவு, டிஆர் பாலுவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்றும், போனால் போகட்டும் என அவரது மகன் டிஆர்பி ராஜாவுக்கு, கட்சியில் பதவியும், அமைச்சரவையில் இடமும் கொடுத்தற்கு டி.ஆர்.பாலு தனது விசுவாசத்தை 10 பேர் முன்னாடி காட்டிட்டாருன்னு, இளைஞரணி நிர்வாகிகள் கொதிக்கின்றனர். இந்த விவகாரம் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளதாம். இதைக் கேட்டு உதயநிதி ஸ்டாலின் கொதித்துப்போய் உள்ளாராம்.
இதனால், உதயநிதி ஸ்டாலினுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் எந்த நேரத்திலும் நேரடியாகவே மோதல் வெடிக்கலாம் என்றும், இனி டிஆர் பாலு அறிவாலயம் பக்கம் எட்டிப்பார்க்க முடியாது திமுகவின் மேலிடத்தை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.