கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தில் ஆற்றூர், திருவட்டார், மேற்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இதனால், திருவட்டார் அருகே தோட்டவாரம் பகுதியில் சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் பிரகாஷ் என்பவரது வீட்டில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நள்ளிரவில் திருவட்டார் வட்டாட்சியர் முருகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் நள்ளிரவில் திடீரென வீட்டில் புகுந்து பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த வருடம் விநாயகர் சிலைகள் பூஜைகளில் வைக்கப்பட்ட பகுதிகளிலும் தற்போது விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிலை வைப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தொடர் மிரட்டல் விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.