மும்பை ஐ.ஐ.டி. மாணவருக்கு 3.7 கோடி சம்பளம்!
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை ஐ.ஐ.டி. மாணவருக்கு 3.7 கோடி சம்பளம்!

கேம்பஸ் இன்டர்வியூவில் சர்வதேச நிறுவனத்தில் வேலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 19, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேம்பஸ் இன்டர்வியூவில் மும்பை ஐ.ஐ.டி. மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 3.7 கோடி ரூபாய் சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் சம்பளம் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

மும்பை ஐ.ஐ.டி. கல்லூரியில் ஆண்டுதோறும் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறும். இந்த வேலைவாய்ப்பில் இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த அதிகபடியான மாணவர்கள், சர்வதேச நிறுவனங்களுக்கு தேர்வாவார்கள். அந்த வகையில், இந்தாண்டும் மும்பை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ சமீபத்தில் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டன.

பல்வேறு சுற்றுக்களாக நடத்தப்பட்ட இம்முகாமில், சர்வதேச நிறுவனங்களில் சுமார் 300 வேலைவாய்ப்புகள் இருந்த நிலையில், 194 இடங்கள் மாணவர்களால் நிரப்பப்பட்டது. இதில், மும்பை ஐ.ஐ.டி. மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 3.7 கோடி ரூபாய் சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அந்த பட்டதாரி சர்வதேச வேலைவாய்ப்பில் இதுவரை இல்லாத அளவில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

கடந்தாண்டு மும்பை ஐ.ஐ.டி. கல்லூரியில் மிக உயர்ந்த சர்வதேச வேலைக்கான வருடாந்திர சம்பளம் 2.1 கோடி ரூபாய்க இருந்தது. தற்போது அதைவிட அதிகமாகவும், இதுவரை இல்லாத அளவிலும் ஆண்டு சம்பளம் 3.7 கோடி ரூபாய் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. அதேபோல, உள்நாட்டு வேலைவாய்ப்பில் அதிக வருவாயாக 1.7 கோடி ரூபாய் சம்பளத்தில் ஒரு மாணவருக்கு வேலை கிடைத்திருக்கிறது. கடந்தாண்டு உள்நாட்டு சம்பளத்தில் அதிகபட்சம் 1.8 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இந்தாண்டு 1.7 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.

வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர, ஆண்டு சம்பளம் 1 கோடி ரூபாய்க்கு மேல் 16 மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இந்த வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை. கடந்தாண்டு ஜூலை முதல் இந்தாண்டு ஜூன் வரையில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் மொத்தம் 2,174 மாணவர்கள் பதிவு செய்ததில், 1,845 பேர் பங்கேற்றனர். இவர்களில் 1,516 பேருக்கு வேலை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IIT BombaySalary packageRs. 3.7 croreper year
ShareTweetSendShare
Previous Post

சாம்சன் போட்ட பதிவு – இரசிகர்கள் சோகம் !

Next Post

நாயக்கர் கால கருப்புசாமி சிலை கண்டெடுப்பு !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies