நாயக்கர் கால கருப்புசாமி சிலை கண்டெடுப்பு !
Sep 5, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாயக்கர் கால கருப்புசாமி சிலை கண்டெடுப்பு !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை சிறுதூர் கண்ணனேந்தல் பகுதிக்கு உட்பட்ட பறையாத்திகுளம் கண்மாய் அருகே நாயக்கர் காலத்து கருப்பசாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கிக் கிடந்த சிலையை கண்ணனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்பாலகிருஷ்ணன், சி.எஸ்.ஜெகநாதன், பிரகாஷ், முத்துராமன் ஆகியோர் கண்டெடுத்து உள்ளனர்.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலையை ஒப்படைத்தனர். இந்த சிலை குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரனிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டின் கிராமங்களில் பரவலாக காணப்படுகின்ற வழிபாட்டு முறையில் முக்கியமானது கருப்பசாமி வழிபாடு.

குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டார் பண்பாட்டு மரபு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராம காவல் தெய்வ வழிபாடுகளில் கருப்பசாமி, கருப்பன் எனவும் அழைக்கப்படுவதுண்டு. குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களால் கருப்பசாமி அழைக்கப்படுகிறார். பொதுவாக பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக உள்ளார்.

கண்டறியப்பட்ட சிலை நின்ற கோலத்தில் தலையில் பெரியத் தலைப்பாகை , நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கு கீழே பெருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இச்சிற்ப வடிவ அமைப்பை பொறுத்து நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும், இந்த சிலை குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Madurai
Share
Tweet
SendShare
Previous Post

மும்பை ஐ.ஐ.டி. மாணவருக்கு 3.7 கோடி சம்பளம்!

Next Post

மீண்டும் அணிக்கு திரும்பும் ஆல்ரவுண்டர் அஸ்வின் !

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies