இந்தியா வீரர் புஜாராவுக்குத் தடை !
Jan 14, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா வீரர் புஜாராவுக்குத் தடை !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர் புஜாராவுக்கு இங்கிலாந்து கவுன்டித் தொடரில் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. புஜாரா எந்த தவறும் செய்யாத நிலையில், அவரது அணி வீரர்கள் செய்த தவறுக்கு அவருக்கும் சேர்த்து கேப்டன் என்ற முறையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பல்வேறு மாநில கவுன்டி அணிகள் பங்கேற்று வருகின்றன. அந்த அணிகள் ஒரு போட்டியில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த வகையில் இந்திய வீரர்களான புஜாரா, ஜெயதேவ் உனட்கட், சாஹல் உள்ளிட்டோர் பல்வேறு கவுன்டி அணிகளில் இடம் பெற்று ஆடி வருகின்றனர். முன்னணி கவுன்டி அணிகளில் ஒன்றான சசக்ஸ் அணியில் புஜாரா, ஜெயதேவ் உனட்கட் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

புஜாரா மூத்த டெஸ்ட் அணி வீரர் என்பதால் சசக்ஸ் அணி அவரை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்து இருக்கிறது. அவர் அணி விளையாடிக்கொண்டிருக்கும் போது சுழற் பந்துவீச்சாளர் ஜாக் கார்சன் எதிரணி பேட்ஸ்மேன் பென் காக்ஸ் ரன் எடுக்க ஓடி வந்த போது அவரது காலை தட்டி விட்டார்.

இதை நடுவர்கள் கவனித்து விட்டனர். ஜாக் அதை வேண்டுமென்றே செய்தார் என்பது குறித்து நடுவர் சசக்ஸ் அணி வீரர்களிடம் விவரித்த போது டாம் ஹெய்னஸ் மற்றும் அரி கார்வேலஸ் வாதம் செய்ததால் அவர்கள் மூவருக்கும் பெனால்ட்டி விதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் சசக்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும், அந்த அணி தவறுக்கான தண்டனையாக புள்ளிகளை இழந்துள்ளது.

இந்த சீசனில் சசக்ஸ் அணி நான்கு தவறுகளை செய்து பெனால்டி பெற்று இருக்கும் நிலையில், விதிப்படி அந்த அணிக்கு இந்த சீசனில் 12 புள்ளிகளை குறைத்து இருக்கிறது கவுன்டி கிரிக்கெட் நிர்வாகம். மேலும், ஒரே சீசனில் ஒரு அணி நான்கு முறை பெனால்ட்டி பெற்றால் அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்த வீரர்களுக்கு கேப்டனாக இருந்த ஒரே குற்றத்துக்காக புஜாராவுக்கும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: Cricket
ShareTweetSendShare
Previous Post

மாஜி அமைச்சர் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை – ரூ. 5 லட்சம் அபராதம் – உயர்நீதிமன்றம் அதிரடி!

Next Post

முதன்முதலில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies