மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!
Jun 7, 2025, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றம்  மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, 30 ஆண்டுகளுக்கு மேலான இழுபறிக்குப் பின், தற்போது நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான மசோதா, நடப்பு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமானாலும், அடுத்து வரும் ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல் அல்லது மக்களவை தேர்தலில் நடைமுறைக்கு வராது. தற்போதைய சூழ்நிலையில், 2029-ல்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில்  நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறு பக்கங்கள் உள்ள, 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கான நேரடி தேர்தல்களில், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்

அதே நேரத்தில் மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைகளுக்கு இது பொருந்தாது.

இந்த இட ஒதுக்கீட்டில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மூன்றில் ஒரு பங்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும்.

கடந்த, 2010-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இடம்பெற்றிருந்த, ஆங்கிலோ — இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு, தற்போதைய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது.

மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், ஒவ்வொரு தொகுதி மறுவரையின்போதும், சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும்

மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். அதன்பின், மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும்.

கடந்த 2002-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 82வது பிரிவு திருத்தப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை, 2026-க்குப் பின் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இதன்படி பார்த்தால், 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே, இடஒதுக்கீடு அமலுக்கு வர வேண்டும்.

ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 2027ல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும்.

அதன்பின், தொகுதி மறுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2029ல் இருந்து, மகளிர் இடஒதுக்கீடு, நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.

Tags: PM ModiPARLIMENT SPECIAL SESSIONwomen bill
ShareTweetSendShare
Previous Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ஜெயஸ்ரீ உல்லால்!

Next Post

உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம்! – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

Related News

நார்வே செஸ் போட்டி : 7-வது முறையாக பட்டம் வென்றார்!

400 ட்ரோன்கள், 40 ஏவுகணைகள் – உக்ரைனை பழி வாங்கிய ரஷ்யா!

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஜே.டி., வான்ஸை அதிபராக்க வேண்டும் – எலான் மஸ்க் ஆதரவு

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

காஞ்சிபுரத்தில் பாஜக பயிலரங்கம் – மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருது – ஆர்மோனிய பெட்டியின் ரகசியத்தை உடைத்த இசைஞானி!

2026 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் – வங்க தேச இடைக்கால தலைவர் அறிவிப்பு!

இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் தர்மேந்திர பிரதான்

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு – 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

இன்று மதுரை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்களை வரும் 9 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies